பெரியகுளம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்த கையோடு தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன்.
அதிமுகவில் இருந்தபோது பெரியகுளம் தொகுதி எம்.பியாக இருந்தவர் தினகரன். பின்னர் அந்தத் தொகுதி கலைக்கப்பட்டு தேனி தொகுதியாக மாறியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொகுதியில் களம் காண்கிறார் தினகரன். பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவுக்கு திருச்சி, தேனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டாளம்மன் கோவிலில் வைத்து அறிவித்தார் டிடிவி தினகரன். இதில் திருச்சியில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலரும், மாவட்ட மாநகர செயலாளருமான செந்தில்நாதன் போட்டியிடுவதாகவும், தேனியில் தானே போட்டியிடுவதாகவும் தினகரன் இன்று அறிவித்தார். இதையடுத்து உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார். தேனி தொகுதிக்குட்பட்ட பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியில் வேன் மூலம் அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வழியெங்கும் அவருக்கு அமமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். தான் போட்டியிடுவது குறித்து டிடிவி தினகரன் பேசுகையில், நான் யாரையும் போட்டியாக கருதவில்லை. மக்கள் முடிவு செய்வார்கள். நான் பேச மாட்டேன்.. செயலில் காட்டக் கூடியவன். இந்த மண் எனக்கு அரசியலில் பிறப்பு கொடுத்தத மண். இந்த மண்ணின் மக்களின் வீட்டில் நானும் ஒரு பிள்ளை. அவர்களுக்கு என்னைத் தெரியும். அவர்களுக்குத் தேவையானதை நான் செய்வேன்.
ஓபிஎஸ்ஸும், அவரது மகனும் மற்றும் கூட்டணிக் கட்சியினரும் என்னை இங்கே போட்டியிடக் கூறினார்கள். இதனால்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். எனக்கு வழி விட்டு விட்டு ஓபிஎஸ் அவர்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். அவரும் வெற்றி பெறுவார், நானும் வெல்வேன்.. கூட்டணிக் கட்சியினரும் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார் தினகரன்.
பின்னர் வேன் மூலம் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டபோது குக்கரைக் காட்டி மக்களிடையே தனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு பேசியபடி சென்றார் தினகரன்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
{{comments.comment}}