- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
அமுதத்தமிழ் அக்காரஹரி
செந்தமிழ் செங்கான்மால்ஹரி
தேன்தமிழ் தேவராஜஹரி
ஈரத்தழிழ் ஆய்ப்பாடிஹரி
ஆழித்தமிழ் ஆராவமுதஹரி
முக்கனித்தமிழ் முகுந்தஹரி
சங்கத்தமிழ் சக்ரவர்த்திராமஹரி
முழ்கி முத்தெடுப்போம்
முகாரி ஹரிநாமமதிலே

அன்னை யசோதை பாலகனே
ப்ருந்தாவனக் கோபாலனே
அள்ளி அணைத்து
மடிமீது அமர்த்திக்க துடிக்கிறேனாடா
காதில் குண்டலம் அசைந்தாட
கழுத்தில் மணிச்சரம் இசைபாட
காலில் சதங்கை ஜதிபோட
நீ பார்த்தும் பாரா பாவனை ஏனோ கண்ணா!
கீதாநாயகன் க்ருஷ்ண
பாதாரமே சரணம் பற்றிடும் பக்தர்கள்
பாவவினை நீக்கி பரமபதம் தந்தருளும்
தேவகி பாலனாய் பிறந்து
யசோதையின் திருமகளாய் வளர்ந்து
கோகுலம் தன்னில் ஆனிறைகள் மேய்த்து
கோபியர்க்கு அருள் செய்தானே!
விழிகளிலே மாலவன்
நாளெல்லாம் அவனையே தொழுது
கண்ணீர்மல்கி அச்சுதா அனந்தா
கோவிந்தனை பாடி பறை கொள்வோம்
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}