- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
நந்தகோபஹரி
இளஞ்சிங்கஹரி
ஆழிமழைக்குஹரி
பரமனடிஹரி
கார்மேனிஹரி
செங்கண்ஹரி
கதிர்மதியஹரி
நாரணஹரியை நாளும் பணிந்து
நற்பாதம் உய்வோமே

கலியுக கறபகமாய்
ஆண்டாள் கற்கண்டாய்
பாமாலை பாடித்தந்தாள்
மார்கழித்திங்களில் மனம்மகிழ்ந்து
பாடியாடி துள்ளி
பால்கடல் துயின்றவனுடன் துயில்வோமே
நோற்றுச் சுவர்க்கமடைய
சூடிகொடுத்த பாவையைப்பற்றி
நாற்றத்துழாய்முடி நாரணனை
நாம் போற்றிப்புகழ்ந்து
கறவைகள் பின்சென்றானை
ஏலாப்பொய்களுரைப்பானை
ஏகாந்தமாய் பாடியேற்றுவோமே
வானும்விண்ணும் தொழுதேத்தும் புருஷோத்தமனை
புந்தியில் புகுந்து குள்ளக்குளிர குடைந்து
நீராடி வையம் வாழும் மாந்தரின் பாதம் பணிந்தால்
பங்கயக் கண்ணனின் திருவடி திண்ணமே
பூவிதழிலே புல்லாங்குழல் கானம்
பூலோகமே மயங்கிடவே புளகாங்கிதம்
புகலொன்றிலா நின்னடியில் புகுந்து
குளிர்கிறோம் குணவாளனே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)
விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்
Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு
3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்
கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு
கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்
எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!
மணாளனின் மாண்புகள்!
Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..
{{comments.comment}}