மும்பை : மகாராஷ்டிராவில் உள்ள நிரல் கிருஷ்ண காளி கோவிலுக்கு சாமி கும்பிட வந்த அம்பானி மகன் ஆனந்த் அம்பானி அணிந்து வந்த வாட்ச்சின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பிரபல தொழிலதிபரும், உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் அனில் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சன்டை ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொள்ள போகிறார். ஆனால் இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் 3 மாதங்களுக்கு முன்பே துவங்கி நடந்து வருகிறது. இவர்களின் திருமண வைபவத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ப்ரீ வெட்டிங், பூஜை, பார்ட்டி என திருமண வைபவங்கள் களைகட்டி வருகிறது. மும்பையில் 2023ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கல்யாண ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வரும் நிலையில் திருமணத்திற்கு அம்பானி குடும்பத்தினர் எப்படி நகை, ஆடைகளை அணிய போகிறார்கள் என்பதை காண அனைவரும் ஆவலாக காத்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஆனந்த் அம்பானியின் திருமண பத்திரிக்கையில் வெள்ளி, தங்கத்தால் ஆன சுவாமி சிலைகள் பதிக்கப்பட்டிருப்பது செம வைரலாகி, ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் நிரல் பகுதியில் உள்ள கிருஷ்ணா காளி கோவிலுக்கு சென்று, அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற வாட்ச் ஒன்றை அணிந்து வந்திருந்தார். இந்த வாட்ச் என்னவோ பார்ப்பதற்கு திருவிழாவில் விற்கும் சாதாரண கலர் வாட்ச் போல தான் உள்ளது. ஆனால் உண்மையில் இந்த வாட்ச் சாதாரணமானது அல்ல.
மிக அரிதான சிவப்பு கார்பனில் செய்யப்பட்ட Richard Mille RM 12-01 Tourbillon ரகத்தை சேர்ந்தது. மிக குறைவான எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டும் இந்த வாட்ச்சின் விலை ரூ.6.91 கோடியாம். ஆனந்த் அம்பானி இது போன்ற அரிதான காஸ்ட் வாட்ச்களை கட்டுவது இது முதல் முறையல்ல. இது போன்ற பல ரக வாட்ச்களை அவர் வைத்துள்ளாராம். Patek Philippe, Richard Mille, Rolex என உலகின் காஸ்ட்லி வாட்ச்கள் பலவும் இவரின் கலெக்ஷனில் உள்ளதாம்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}