- ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 23 :
மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள் :
மழைக்காலத்தில் மலைகளில் இருக்கும் குகைகளில் வசிக்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நான்கு புறமும், உடலை ஆட்டி பிடரி, ரோமங்கள் சிலிர்க்க கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே புறப்படும். அது போல காயாம்பூ நிறத்தை உடைய கண்ணனே! நீயும் வீர நடை போட்டு உன் கோவிலில் இருந்து வெளியேறி, இங்கு வந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அவற்றை நிறைவேற்றி அருள் செய்ய வேண்டுகிறோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் மீண்டுமா?...தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து அதிரடி உயர்வு
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. 30% வாக்குகள் கிடைக்கும்.. தவெக சொல்கிறது!
டிசம்பர் 28 முதல் 30 வரை...இபிஎஸ் தேர்தல் பிரசாரம்...புதிய விபரம் வெளியீடு
எளியோருக்கு உதவ இந்நாளில் முடிவெடுப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 24, 2025... இன்று மதிப்பு, மரியாதை உயரும்
வைகுண்ட ஏகாதசி விரதம்.. இதில் ஏகாதசி ஒரு பெண்.. யார் இந்த பெண்?
மார்கழி 09ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 09 வரிகள்
சாண்டா கிளாஸ் (Santa Claus ).. உலகமெங்கும் அன்பை வாரி வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா!
எழுத மறந்த மடல்!
{{comments.comment}}