திருப்பாவை பாசுரம் 06 :
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள் :
புற்கள், சிறு பறவைகள் ஒலி எழுப்புவதை பார். நம்முடைய தலைவனாகிய திருமாலின் கையில் இருந்து வெள்ளை நிற சங்கு கோவிலில் எழுப்பும் பெரும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே! விழித்துக் கொள். கம்சன் அனுப்பிய அரக்கியிடம் பால் குடிப்பதை போல் நடித்து, அவளை கொன்றவன் நம்முடைய கண்ணன். அழகாக பூத்த பூக்களை மலர்களுடன், தங்களின் உள்ளம் என்னும் தாமரையையும் கண்ணனுக்கு படைத்து வழிபட முனிவர்களும், யோகிகளும் காத்திருந்து ஹரி, ஹரி என சத்தமிடும் பெரும் சத்தமும் உன் காதில் விழவில்லையா. நம்முடைய மனங்களில் குடிகொண்டிருக்கும் கண்ணனின் அருளை பெறுவதற்காக காத்திருந்து, அவரை அழைப்பது கேட்காமல் இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே.
விளக்கம் :
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலகில் 64 லட்சம் உயிரினங்கள் வாழ்வதாக கருட புராணம் சொல்கிறது. அனைத்து உயிர்களையும் காப்பது இறைவன் என்றாலும், அவனுடைய அருள் தனக்கு கிடைக்காதா என அனைத்து உயிர்களும் ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் மட்டும் உலக இன்பங்கள், சுகங்களில் உளன்று இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் தெளிவுபடுத்தி உள்ளார்.
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
{{comments.comment}}