திருப்பாவை பாசுரம் 06 :
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
புற்கள், சிறு பறவைகள் ஒலி எழுப்புவதை பார். நம்முடைய தலைவனாகிய திருமாலின் கையில் இருந்து வெள்ளை நிற சங்கு கோவிலில் எழுப்பும் பெரும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே! விழித்துக் கொள். கம்சன் அனுப்பிய அரக்கியிடம் பால் குடிப்பதை போல் நடித்து, அவளை கொன்றவன் நம்முடைய கண்ணன். அழகாக பூத்த பூக்களை மலர்களுடன், தங்களின் உள்ளம் என்னும் தாமரையையும் கண்ணனுக்கு படைத்து வழிபட முனிவர்களும், யோகிகளும் காத்திருந்து ஹரி, ஹரி என சத்தமிடும் பெரும் சத்தமும் உன் காதில் விழவில்லையா. நம்முடைய மனங்களில் குடிகொண்டிருக்கும் கண்ணனின் அருளை பெறுவதற்காக காத்திருந்து, அவரை அழைப்பது கேட்காமல் இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே.
விளக்கம் :
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலகில் 64 லட்சம் உயிரினங்கள் வாழ்வதாக கருட புராணம் சொல்கிறது. அனைத்து உயிர்களையும் காப்பது இறைவன் என்றாலும், அவனுடைய அருள் தனக்கு கிடைக்காதா என அனைத்து உயிர்களும் ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் மட்டும் உலக இன்பங்கள், சுகங்களில் உளன்று இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் தெளிவுபடுத்தி உள்ளார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}