திருப்பாவை பாசுரம் 06 :
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
பொருள் :
புற்கள், சிறு பறவைகள் ஒலி எழுப்புவதை பார். நம்முடைய தலைவனாகிய திருமாலின் கையில் இருந்து வெள்ளை நிற சங்கு கோவிலில் எழுப்பும் பெரும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே! விழித்துக் கொள். கம்சன் அனுப்பிய அரக்கியிடம் பால் குடிப்பதை போல் நடித்து, அவளை கொன்றவன் நம்முடைய கண்ணன். அழகாக பூத்த பூக்களை மலர்களுடன், தங்களின் உள்ளம் என்னும் தாமரையையும் கண்ணனுக்கு படைத்து வழிபட முனிவர்களும், யோகிகளும் காத்திருந்து ஹரி, ஹரி என சத்தமிடும் பெரும் சத்தமும் உன் காதில் விழவில்லையா. நம்முடைய மனங்களில் குடிகொண்டிருக்கும் கண்ணனின் அருளை பெறுவதற்காக காத்திருந்து, அவரை அழைப்பது கேட்காமல் இன்னும் இப்படி தூங்கிக் கொண்டிருக்கிறாயே.
விளக்கம் :
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இறைவனின் அருளை பெறுவதற்காக காத்திருக்கின்றன. உலகில் 64 லட்சம் உயிரினங்கள் வாழ்வதாக கருட புராணம் சொல்கிறது. அனைத்து உயிர்களையும் காப்பது இறைவன் என்றாலும், அவனுடைய அருள் தனக்கு கிடைக்காதா என அனைத்து உயிர்களும் ஏங்கிக் கிடக்கின்றன. ஆனால் மனிதர்களாக பிறந்த நாம் மட்டும் உலக இன்பங்கள், சுகங்களில் உளன்று இறைவனின் அருளை பெற முயற்சிக்காமல் காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இந்த பாடலில் ஆண்டாள் தெளிவுபடுத்தி உள்ளார்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}