பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாராக விளங்கியவர் ஆண்டாள். ஆழ்வாராகவும், மகாலட்சுமியின் மறு அவதாரமாகவும் ஆண்டாள் வணங்கப்படுகிறார். பன்னிரு ஆழ்வார்களும் பெருமாளை புகழ்ந்து எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் அரங்கனையே கணவனாக அடைய வேண்டும் என்பதற்காக மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருப்பு, ஆண்டாள் பாடிய 30 பாசுரங்களே திருப்பாவை பாசுரங்கள் என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றன. தமிழில் இயற்றப்பட்ட இந்த 30 பாடல்களைக் கேட்டே உலகம் முழுவதிலும் உள்ள வைணவ தலங்களில் திருமால் துயில் எழுகிறார்.
திருப்பாவை பாசுரம் 07 :
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
பொருள் :
அழகிய பெண்ணே, கீச்சு கீச்சு என்று பறவைகளும், வண்டுகளும் சத்தமிடுவது உன் காதில் விழவில்லையா? அழகிய கருமையான நீண்ட கூந்தலை உடைய நம்முடைய ஆயர் குலப் பெண்கள் மத்தினால் தயிர் கடையும் சத்தம் கூட உனக்கு கேட்கவில்லையா? அவர்கள் மத்தினால் தயிரை கடையும் போது கையில் போடப்பட்டிருக்கும் வளையல்களும், கழுத்தில் அணிந்திருக்கும் மணிகளும், தாலியில் அணிந்திருக்கும் காசுகளும் அசைந்து ஒலிப்பு எழுப்புவதும் கூட உன் காதில் விழவில்லையா? நம்முடைய தலைவனான நாராயண மூர்த்தியை, கேசவனை பல விதமான நாமங்களை சொல்லி நாங்கள் பாடிக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டும் இன்னும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயா? தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து, உன்னுடைய வீட்டின் கதவை திற.
விளக்கம் :
அதிகாலையிலேயே ஆயர்குலத்தில் என்னென்ன வேலைகள் நடக்கும், எப்படிப்பட்ட சூழல் இருக்கும் என்பதை அழகாக எடுத்துச் சொல்லி இந்த பாடலை துவங்குவார் ஆண்டாள் நாச்சியார். ஆயர் குலப் பெண்கள் அணிந்திருக்கும் அணிகலன்களையும், அவர்களின் அழகையும், சுறுசுறுப்பையும் எடுத்துக் கூறும் ஆண்டாள். பெருமாலின் நாமங்களில் மிக புனிதமான நாமமாக சொல்லப்படும் நாராயணன், கேசவன் ஆகிய நாமங்களையும் குறிப்பிட்டுள்ளார். திருப்பாவை பாடல்களே கேசவா என்ற நாமத்தை போற்று புகழ்வதை குறிப்பது தான் என்றும் சொல்லப்படுவது உண்டு.
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}