ஆண்டாள் தன்னுடைய பாடல்களில் கண்ணின் பெருமைகளை மட்டுமின்றி பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, தற்கால நிலை ஆகியவற்றுடன் தன்னுடைய நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக பல பாடல்களை இயற்றி உள்ளார். ஒவ்வொரு பாடலிலும் இறைவழிபாட்டினால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என்பதையும் ஆண்டாள் குறிப்பிட்டே அந்த பாடலை இயற்றி உள்ளார்.

திருப்பாவை பாசுரம் 10 :
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.
பொருள் :
முந்தைய பிறவியில் திருமாலை வழிபட்டு, நோன்பு இருந்ததன் பலனாக இந்த பிறவியில் சொர்க்கம் போன்ற சுகமாக வாழும் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்ணே, உன்னுடைய வீட்டின் கதவை தான் திறக்க மாட்டாய். பேசக் கூட மாட்டாயா? தெய்வீக மணம் வீசும் துளசியை அணிந்த நம்முடைய தலைவனாகிய நாராயணனை போற்றி பாடினால் அதற்கான பலனை அவன் தருவான். முந்தைய காலத்தில் வாழ்ந்த கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாக சொல்வார்கள். அந்த கும்பகர்ணன் தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உனக்கு கொடுத்து விட்டானா? கிடைப்பதற்கு அரிய அணிகலன்களை அணிந்த பெண்ணே, எந்த வித பதற்றமும் இன்றி, உன்னுடைய சோம்பலை விடுத்து, வந்து கதவை திற.
விளக்கம் :
யாராவது நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களை கும்பகர்ணனை போல் தூங்குகிறாயே என்போம். இப்படி கிண்டலாக கும்பகர்ணனை உதாரணம் காட்டி சொல்லும் வழக்கம் இப்போது மட்டுமல்ல ஆண்டாள் காலத்திலேயே இருந்துள்ளது என்பதை இந்த பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நாம் நீண்ட நேரமாக எழுப்பியும் யாராவது தூக்கத்தில் இருந்து எழவில்லை என்றால் நாம் எரிச்சல் உணர்விற்கு ஆட்படுவோம். ஆனால் ஆண்டாள் அப்படி செய்யாமல் மிக பொறுமையாக, நகைச்சுவையாக தனது தோழியை கிண்டல் செய்து எழுப்புகிறார்.
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
{{comments.comment}}