ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 16 .. "நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய கோயில்காப் பானே"

Jan 01, 2024,12:09 AM IST

திருப்பாவை பாசுரம் 16 :


நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய 

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர்சிறுசிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.




பொருள் :


எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபாலனுடைய கோவில் போன்ற வீட்டை பாதுகாக்கும் காப்பாளனே. கொடிகளும், தோரணங்களும் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் காப்பவரே. வந்து வீட்டின் கதவை திறந்து விடுங்கள். ஆயர்குலப் பெண்களான நாங்கள் கண்ணனை பார்க்க வந்திருக்கிறோம். பல மாயங்கள் செய்து விளையாடும் அந்த கண்ணன் எங்களுக்கு சிறிய பறை போன்ற இசைக் கருவி ஒன்றை தருவதாக வாக்களித்திருந்தான். அதை வாங்கிச் செல்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம். கண்ணனிடம் அந்த இசைக் கருவியை வாங்கி, அவனின் புகழினை பாடுவதற்காக காலையிலேயே எழுந்து, சுத்தமாக நீராடி, தயாராக வந்திருக்கிறோம். அவனை போற்றி பாடி, வழிபாட்டினை துவக்குவதற்காக வந்திருக்கிறோம். கதவை எல்லாம் திறக்க முடியாது என முன்னரே கூறி மறுத்து விட்டாமல் வீட்டின் கதவை திறந்து எங்களை உங்களே செல்ல அனுமதிக்க வேண்டும்.


விளக்கம் :


திருப்பாவையின் முதல் 15 பாடல்களில் கண்ணனின் பெருமைகள், வீரம், தோற்றம், அவனுடைய பல விதமான அவதாரங்களையும் குறிப்பிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்பி, நீராட அழைத்தாள் ஆண்டாள். பாவை நோன்பின் மகிமை என்ன, பாவை நோன்பினை எப்படி இருக்க வேண்டும். அதனால் என்ன பலன் கிடைக்கும் என அனைவருக்கும் விளக்கிய ஆண்டாள், இந்த பாடலில் கண்ணன் வீட்டிற்கே சென்று அங்குள்ள காவலாளியை எழுப்புகிறாள். இதிலும் ஆயர்குல தலைவனான நந்தகோபலானை புகழ்ந்து, அவரும் அவருடைய மகனுமான கண்ணன் வசிக்கும் இடம் கோவில் போன்று புனிதமானது என போற்றி பாடுகிறாள்.

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி

news

அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்

news

எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்