திருப்பாவை பாசுரம் 16 :
நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர்சிறுசிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
பொருள் :
எங்களுடைய தலைவனாக இருக்கும் நந்தகோபாலனுடைய கோவில் போன்ற வீட்டை பாதுகாக்கும் காப்பாளனே. கொடிகளும், தோரணங்களும் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள வாசலில் நின்று காவல் காப்பவரே. வந்து வீட்டின் கதவை திறந்து விடுங்கள். ஆயர்குலப் பெண்களான நாங்கள் கண்ணனை பார்க்க வந்திருக்கிறோம். பல மாயங்கள் செய்து விளையாடும் அந்த கண்ணன் எங்களுக்கு சிறிய பறை போன்ற இசைக் கருவி ஒன்றை தருவதாக வாக்களித்திருந்தான். அதை வாங்கிச் செல்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம். கண்ணனிடம் அந்த இசைக் கருவியை வாங்கி, அவனின் புகழினை பாடுவதற்காக காலையிலேயே எழுந்து, சுத்தமாக நீராடி, தயாராக வந்திருக்கிறோம். அவனை போற்றி பாடி, வழிபாட்டினை துவக்குவதற்காக வந்திருக்கிறோம். கதவை எல்லாம் திறக்க முடியாது என முன்னரே கூறி மறுத்து விட்டாமல் வீட்டின் கதவை திறந்து எங்களை உங்களே செல்ல அனுமதிக்க வேண்டும்.
விளக்கம் :
திருப்பாவையின் முதல் 15 பாடல்களில் கண்ணனின் பெருமைகள், வீரம், தோற்றம், அவனுடைய பல விதமான அவதாரங்களையும் குறிப்பிட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்பி, நீராட அழைத்தாள் ஆண்டாள். பாவை நோன்பின் மகிமை என்ன, பாவை நோன்பினை எப்படி இருக்க வேண்டும். அதனால் என்ன பலன் கிடைக்கும் என அனைவருக்கும் விளக்கிய ஆண்டாள், இந்த பாடலில் கண்ணன் வீட்டிற்கே சென்று அங்குள்ள காவலாளியை எழுப்புகிறாள். இதிலும் ஆயர்குல தலைவனான நந்தகோபலானை புகழ்ந்து, அவரும் அவருடைய மகனுமான கண்ணன் வசிக்கும் இடம் கோவில் போன்று புனிதமானது என போற்றி பாடுகிறாள்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}