திருப்பாவை பாசுரம் 28 - கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்

Jan 13, 2024,10:34 AM IST
திருப்பாவை பாசுரம் 28 :

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

பொருள் :



குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, நாங்கள் கறவை மாடுகளின் பின்னால் சென்று அவற்றிற்கு தேவையானவற்றை கவனித்து, மேய்ச்சல் செய்து வாழ்பவர்கள். அந்த மாடுகள் தரும் பாலை வைத்து உணவு சமைத்து உண்பவர்கள். ஆயர்குல பெண்களானவ எங்களுக்கு உலக அறிவு ஏதும் கிடையாது. ஆனாலும் தலைவனாகிய உன்னை துதித்து, பாடிய பிறகு இந்த பிறவியில் நாங்கள் பிறந்த பலனை அடைந்து விட்டோம். இனி எங்களுக்கு நிச்சயமாக வைகுண்டத்தில் இடம் கிடைக்கும் என்பதை மட்டும் நாங்கள் அறிவோம். உன் மீது கொண்ட அதீத பக்தியின் காரணமாக உனக்கும் எங்களுக்கும் ஒரு உறவு ஏற்பட்டு விட்டது. இதை யாராலும் அழித்து விட முடியாது. அந்த உறவின் உரிமை மிகுதியால் அறியாத பிள்ளைகளான நாங்கள் உன்னை ஒருமையில் அழைத்து பேசி இருப்போம். அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாதே. எங்களின் பிழைகளை பொறுத்து, எங்களுக்கு உன்னுடைய அருளை தர வேண்டும் இறைவனே.

விளக்கம் :

இறைவனை வணங்கினாலே அவனுக்கும் நமக்கும் ஒரு பந்தம் ஏற்பட்ட உணர்வு அனைவருக்கும் வந்து விடும். அதன் காரணமாகவே நமக்கு ஏதாவது துன்பம் ஏற்படும் சமயங்களில் உரிமையுடன் கடவுளிடம் சண்டை போடுவோம், திட்டுவோம். இறைவனை பெயர் சொல்லி, ஒருமையில் அழைப்பதும் தவறு தான். அந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என அறியாத சிறிய பிள்ளைகளை உலக மக்கள் இறைவனிடம் மன்றாடுவதாக ஆண்டாள் இந்த பாடலில் குறிப்பிட்டுள்ளார். இறைவனை பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும், அவனை வணங்கினால் நாம் புண்ணியம் பெற்று விடுவோம். நமக்கு வைகுண்டம் கிடைத்து விடும் என்பதையும் ஆண்டாள் உறுதியாக சொல்கிறார். இந்த பாடலில் கோவிந்தா என்ற நாமத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறார். திருமாலின் நாமங்களில் மிகவும் உயர்ந்த புண்ணியத்தை தரக் கூடியது கோவிந்த நாமம். அதனாலேயே பெருமாள் கோவிலுக்கு சென்றால் கோவிந்தா என அனைவரும் கோஷமிடுகின்றனர். கோவிந்தா என்ற நாமத்தை சொன்னால் பசு தானம் செய்த பலன் நமக்கு கிடைத்து விடும் என்பது ஐதீகம்.செய்தி விளக்கத்தை உள்ளிடவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்