ஆந்திராவில்.. 2 ரயில்கள் மோதி பெரும் விபத்து.. மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு

Oct 30, 2023,02:45 PM IST

விஜயநகரம்: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதிய விபத்தில்  பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியாக நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன.


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே  பழுது காரணமாக நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த பாலசா பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் பாலசா ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவில் விபத்து நடந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. விபத்து குறித்த தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை செய்தனர்.




இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரயில் விபத்தில் பலியானவர்களில் ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும் நிவாரணை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணமாக ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்