அண்ணா பல்கலை.யில் வெறியாட்டம் போட்டபோது.. அம்மாவும், மகளும் கண்ணில் தெரியவில்லையா ஞானசேகரன்?

May 28, 2025,04:00 PM IST

சென்னை:  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்  கைதான ஞானசேகரன் தனக்கு கடும் தண்டனை விதித்து விடாதீர்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம்தான் கொடுமையானது.. கேட்டாலே கொதிப்படைய வைக்கிறது.


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சக மாணவருடன் அமர்ந்து மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இருவரையும் மிரட்டி, மாணவனை அனுப்பிவிட்டு மாணவியை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் செய்திருந்தார்.


இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் பரோட்டா கடை வைத்திருந்தவர்தான் ஞானசேகரன். கடந்த 5 மாதங்களாக நடந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.




இன்று நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர் செய்யப்பட்டபோது அவரிடம், தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறாய் என்று நீதிபதி கேட்டபோது, எனக்கு வயதான தாயார் இருக்கிறார். நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பா இல்லாததால் அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு 8 வயதில் மகள் உள்ளார். அவரையும் நான் பார்க்க வேண்டும். எனவே குறைந்த அளவிலான தண்டனை தருமாறு கேட்டுள்ளார் ஞானசேகரன்.


என்ன கொடுமை பாருங்க.. அந்த இரவு நேரத்தில் ஒரு அப்பாவி பெண்ணை கொடூரமாக சீரழித்தபோது தனது தாயார் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனது மகள் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே என்ற எண்ணம் கூட அந்த நேரத்தில் வரவும் இல்லை.. ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனாக அவர் அப்போது நடந்து கொள்ளவும் இல்லை. அந்த உணர்வே அவருக்கு இல்லை.. ஆனால் இன்று தண்டனையிலிருந்து தப்பிக்க அம்மாவையும், மகளையும் கேடயமாக பயன்படுத்தப் பார்க்கிறார் ஞானசேகரன்!


ஆனால் ஞானசேகரனின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கக் கூடாது. இரக்கமே காட்டாமல் உச்சபட்ச தண்டனை தர வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார். கடும் தண்டனை கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களும் கூட ஞானசேகரனுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்