அண்ணா பல்கலை.யில் வெறியாட்டம் போட்டபோது.. அம்மாவும், மகளும் கண்ணில் தெரியவில்லையா ஞானசேகரன்?

May 28, 2025,04:00 PM IST

சென்னை:  சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்  கைதான ஞானசேகரன் தனக்கு கடும் தண்டனை விதித்து விடாதீர்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம்தான் கொடுமையானது.. கேட்டாலே கொதிப்படைய வைக்கிறது.


அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி சக மாணவருடன் அமர்ந்து மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இருவரையும் மிரட்டி, மாணவனை அனுப்பிவிட்டு மாணவியை தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் செய்திருந்தார்.


இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அதே பகுதியில் பரோட்டா கடை வைத்திருந்தவர்தான் ஞானசேகரன். கடந்த 5 மாதங்களாக நடந்த விசாரணையின் அடிப்படையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஞானசேகரன் குற்றவாளி என்றும் அவர் மீதான 11 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.




இன்று நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர் செய்யப்பட்டபோது அவரிடம், தீர்ப்பு குறித்து என்ன சொல்ல விரும்புகிறாய் என்று நீதிபதி கேட்டபோது, எனக்கு வயதான தாயார் இருக்கிறார். நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பா இல்லாததால் அம்மாவை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு 8 வயதில் மகள் உள்ளார். அவரையும் நான் பார்க்க வேண்டும். எனவே குறைந்த அளவிலான தண்டனை தருமாறு கேட்டுள்ளார் ஞானசேகரன்.


என்ன கொடுமை பாருங்க.. அந்த இரவு நேரத்தில் ஒரு அப்பாவி பெண்ணை கொடூரமாக சீரழித்தபோது தனது தாயார் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனது மகள் கண்ணுக்குத் தெரியவில்லை.. தனக்கும் ஒரு மகள் இருக்கிறாளே என்ற எண்ணம் கூட அந்த நேரத்தில் வரவும் இல்லை.. ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பனாக அவர் அப்போது நடந்து கொள்ளவும் இல்லை. அந்த உணர்வே அவருக்கு இல்லை.. ஆனால் இன்று தண்டனையிலிருந்து தப்பிக்க அம்மாவையும், மகளையும் கேடயமாக பயன்படுத்தப் பார்க்கிறார் ஞானசேகரன்!


ஆனால் ஞானசேகரனின் எந்தக் கோரிக்கையையும் ஏற்கக் கூடாது. இரக்கமே காட்டாமல் உச்சபட்ச தண்டனை தர வேண்டும் என்று அரசுத் தரப்பு வாதிட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி கூறியுள்ளார். கடும் தண்டனை கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுமக்களும் கூட ஞானசேகரனுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!

news

Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!

news

திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

அதிகம் பார்க்கும் செய்திகள்