கடலூர்: பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது பிரதமர் சொன்ன 400 எம்.பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை.
தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19ம் தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும்,தமாகா 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினர்களும் கடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு ஆதரவாக முதுநகர் பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தங்கர் பச்சானுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். பிரதமர் மோடி கூறிய 400 எம்பிக்களில் தங்கர் பச்சானும் ஒருவர். அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி, எம். எல்.ஏ.க்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால், தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.
தங்கர் பச்சான் இயக்குனராக மட்டுமல்லாமல், பாட்டாளி மக்கள் கட்சிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். திமுக ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிட தகுதி இல்லை என்று கூறி வாக்கு சேகரித்தார்.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}