அண்ணாமலை முதலமைச்சர் ஆவதெல்லாம் நடக்காத விஷயம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Jan 18, 2024,09:42 AM IST

சென்னை: அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். 


எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் என்பதால் 107 கிலோவில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.  விழாவில் அதிமுக முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஆயிரத்தில் ஒருவராக போற்றப்படுகிறவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். உலகம் போற்றக்கூடியவர். அவர் நடித்த படத்தில் பல நல்ல கருத்துக்களை கூறினார். தற்போது அவ்வாறான கருத்துக்கள் எதுவும் இல்லை. 


அன்பு, நன்றி, கருணை கொண்டவர் மனித உருவில் உள்ள தெய்வம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணா வழியில் பேகிறவன் நான்.த மிழர்கள் என்றால் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு என்பது வீரமும் காதலும்.  வீரம் இல்லாதவனும் தமிழன் இல்லை. காதல்  இல்லாதவனும் தமிழனும் இல்லை. 


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ரஜினிகாந்த்தை அறிவிக்க இருந்ததாக துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தது பற்றி பேசினார். அது, குருமூர்த்தி மற்றும் ரஜினி இடையே உரையாடல் நான்கு சுவர் கொண்ட அறைக்குள் நடந்தது. இந்த விவகாரம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்து தெரிவிக்கட்டும் அதன் பின்னர் நான் எனது கருத்தை கூறுகிறேன். 


நான் சொன்னேன் சொல்லலைன்னு ரஜினி சொல்லட்டும் அப்புறம் நான் சொல்றேன். நான்கு அறைக்குள் நடந்ததை நான் எப்படி அம்பலத்தில்  சொல்ல முடியும். நான் சொல்றேன் எது எப்படி இருந்தாலும் அண்ணாமலை முதலமைச்சர் ஆவது என்பது இலவு காத்த கிளி போலத்தான். அது நடக்காத விஷயம். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட அம்மாவுடைய ஆட்சி தான் எடப்பாடி தலைமையில் மலரும் என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

எங்க வீட்டுக் குலதெய்வம் வீரப்பன்.. செம்மண்ணை எடுத்து வந்து.. 25 பிள்ளையார் பிடித்து!

news

அறிவுக்கும் ஒரு திருக்கோவில் இருக்கு.. ஆழியாறு போனா இதை மறக்காதீங்க!

news

கோப்பையை ராகுல் டிராவிட், லட்சுமணுக்கு அர்ப்பணிக்கிறேன்.. கெளதம் கம்பீர் நெகிழ்ச்சி

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்