"வலிக்குதாண்ணா".. காயமடைந்த நிர்வாகியின்.. காலைத் தொட்டு நலம் விசாரித்த அண்ணாமலை!

Jan 21, 2023,02:14 PM IST
கடலூர்: கடலூர் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காயமடைந்த பாஜக நிர்வாகியின் காலைத் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்த செயல் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியில் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், அனல் பறக்கவும் காணப்பட்டாலும் கூட கட்சியினரிடம் காட்டும் கனிவு அவர்களை நெகிழ வைத்து வருகிறது. தொண்டர்களின் தலைவனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அண்ணாமலையும் ஆர்வம் காட்டுகிறார்.

கட்சியினரைத் தேடித் தேடிப் போகிறார். நிர்வாகிகளின் வீடுகளில் சாப்பிடுகிறார். இந்த நிலையில் கடலூர் சென்றிருந்த அண்ணாமலை,  அங்கு மார்க்கெட் காலனி 28வது வார்டு உறுப்பினர் சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருப்பதை அறிந்து சென்றார்.

சக்திவேல் வீட்டுக்குச் சென்ற அவர் அவரது காலைத் தொட்டுப் பார்த்து இப்ப எப்படி இருக்குண்ணா என்று கேட்டு நலம் விசாரித்தார். இதைப் பார்த்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில், சக்திவேல் அவர்கள், காலில் காயமடைந்த செய்தி அறிந்து, இன்று அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல் நலன் பெற்று, மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்