"வலிக்குதாண்ணா".. காயமடைந்த நிர்வாகியின்.. காலைத் தொட்டு நலம் விசாரித்த அண்ணாமலை!

Jan 21, 2023,02:14 PM IST
கடலூர்: கடலூர் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காயமடைந்த பாஜக நிர்வாகியின் காலைத் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்த செயல் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியில் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், அனல் பறக்கவும் காணப்பட்டாலும் கூட கட்சியினரிடம் காட்டும் கனிவு அவர்களை நெகிழ வைத்து வருகிறது. தொண்டர்களின் தலைவனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அண்ணாமலையும் ஆர்வம் காட்டுகிறார்.

கட்சியினரைத் தேடித் தேடிப் போகிறார். நிர்வாகிகளின் வீடுகளில் சாப்பிடுகிறார். இந்த நிலையில் கடலூர் சென்றிருந்த அண்ணாமலை,  அங்கு மார்க்கெட் காலனி 28வது வார்டு உறுப்பினர் சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருப்பதை அறிந்து சென்றார்.

சக்திவேல் வீட்டுக்குச் சென்ற அவர் அவரது காலைத் தொட்டுப் பார்த்து இப்ப எப்படி இருக்குண்ணா என்று கேட்டு நலம் விசாரித்தார். இதைப் பார்த்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில், சக்திவேல் அவர்கள், காலில் காயமடைந்த செய்தி அறிந்து, இன்று அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல் நலன் பெற்று, மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்