"வலிக்குதாண்ணா".. காயமடைந்த நிர்வாகியின்.. காலைத் தொட்டு நலம் விசாரித்த அண்ணாமலை!

Jan 21, 2023,02:14 PM IST
கடலூர்: கடலூர் சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காயமடைந்த பாஜக நிர்வாகியின் காலைத் தொட்டுப் பார்த்து நலம் விசாரித்த செயல் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியில் ஆக்ரோஷமாகவும், ஆவேசமாகவும், அனல் பறக்கவும் காணப்பட்டாலும் கூட கட்சியினரிடம் காட்டும் கனிவு அவர்களை நெகிழ வைத்து வருகிறது. தொண்டர்களின் தலைவனாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் அண்ணாமலையும் ஆர்வம் காட்டுகிறார்.

கட்சியினரைத் தேடித் தேடிப் போகிறார். நிர்வாகிகளின் வீடுகளில் சாப்பிடுகிறார். இந்த நிலையில் கடலூர் சென்றிருந்த அண்ணாமலை,  அங்கு மார்க்கெட் காலனி 28வது வார்டு உறுப்பினர் சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டு கட்டுடன் இருப்பதை அறிந்து சென்றார்.

சக்திவேல் வீட்டுக்குச் சென்ற அவர் அவரது காலைத் தொட்டுப் பார்த்து இப்ப எப்படி இருக்குண்ணா என்று கேட்டு நலம் விசாரித்தார். இதைப் பார்த்து தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அண்ணாமலை போட்டுள்ள டிவீட்டில், சக்திவேல் அவர்கள், காலில் காயமடைந்த செய்தி அறிந்து, இன்று அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் முழுமையான உடல் நலன் பெற்று, மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்