சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளாராம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. பாபா முத்திரையுடன் அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு ஆண்டு காலம் அதிரடி காட்டி வந்தவர் அண்ணாமலை. சும்மா சொல்லக் கூடாது, கடந்த கால பாஜக தலைவர்களில் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவின் இருப்பை அதீதமாக்கியவர் அண்ணாமலைதான்.
அவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட பாஜகவுக்கு தமிழ்நாட்டில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தினார் என்பதை யாருமே மறுக்க முடியாது. எந்த அரசியல் கட்சித் தலைவரையும் அவர் நிம்மதியாக தூங்க விட்டதில்லை. நிம்மதியாக எழ விட்டதும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு புயலைக் கிளப்பி அதிரடி காட்டி வந்தவர் அண்ணாமலை.
ஆளுங்கட்சிக்கு எதிராக எந்த பிரச்சினை சிக்கினாலும் சரி விஸ்வரூபமாக்கி ஒரு வழி செய்து விடுவதில் கில்லாடியாக இருந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலை மாற்றப்பட்டு விட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் வந்துள்ளார்.
தேசிய பொதுக் குழு உறுப்பினராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நல்ல ஓய்வு கிடைத்துள்ளதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு இமயமலைக்கு ஆன்மீக பயணம் போயுள்ளார் அண்ணாமலை. இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை பாஜக பொதுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாமலை அவர்கள் ஆன்மீக பயணம் போயிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மகாவதார் பாபாஜியின் அருள் அவருக்கு நிறையவே கிடைக்கட்டும். பாபா முத்திரையுடன் அவர் காட்சி தருவது என்னைப் போன்ற ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் விதம் விதமாக கமெண்ட் போடடு வருகின்றனர்.
WTC 2025 Finals: உலக டெஸ்ட் சாம்பியன் தென் ஆப்பிரிக்கா.. ஆஸ்திரேலியாவை வச்சு செய்து அபாரம்!
Dubai fire: துபாய் .. 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. உயிர் அபாயம் ஏதுமில்லை
இஸ்ரேல் தாக்குதல் : ஈரானில் இருந்து வெளியே முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்
சரமாரியான தாக்குதலால்.. தீவிரமடையும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் .. இந்தியா யார் பக்கம்?
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம்.. பயணங்கள் தாமதமாகலாம் or ரத்தாகலாம்.. இண்டிகோ தகவல்
ஏர்இந்தியா விமான விபத்து பற்றி 3 மாதங்களுக்குள் விசாரிக்கப்படும் - அமைச்சர் ராம் மோகன் நாயுடு
ஏர் இந்தியா விமான விபத்து ஒரு சைபர் தாக்குதலா?... சந்தேகம் கிளப்பும் சிவசேனா !
இஸ்ரேல் தாக்குதலில் பலியான முப்படைத் தளபதி.. புதிய ராணுவ தளபதியை அறிவித்த ஈரான்
பற்றி எரியும் மத்திய கிழக்கு.. அனல் பறக்கும் சண்டையில் இஸ்ரேல் - ஈரான்.. மக்கள் பரிதவிப்பு!
{{comments.comment}}