அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு.. அமித்ஷா அறிவிப்பால்.. உற்சாகத்தில் தமிழ்நாடு பாஜக

Jun 28, 2025,05:29 PM IST

டெல்லி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. என்ன பதவி என்று தெரியாமலேயே அவரைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் தொண்டர்கள்.


தேசிய அளவில் பதவி கொடுக்கப்பட்டாலும் கூட தமிழ்நாடு அரசியலிலும் அண்ணாமலை முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இது அவரது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.


அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் அண்ணாமலை அமர வைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் இந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்களுக்குத்தான் இந்த முக்கியப் பொறுப்பு வழக்கமாக அளிக்கப்படும். ஒரு வேளை அண்ணாமலைக்கு கிடைத்தால் அது பெரிய விஷயம்தான்.


மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் பாஜக அதிரடியாக வளர்ச்சி பெற்றது. அதி வேகமான கவனிப்பையும் அது ஈர்த்தது. திமுகவுக்கு கடும் போட்டி தரும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்ததால் அது அதிமுகவைக் கூட ஓரம் கட்டி விட்டு வேகமாக வளர்ந்து வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசப் போக அது பூகம்பமாக வெடித்து கூட்டணியை விட்டு அதிமுக விலகியது. அதன் பின்னர் அது தனித்தே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடுமையாக முயன்றது பாஜக.




கூட்டணி வேண்டும் என்றால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை மாற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. நயினார் நாகேந்திரன் தலைவரானார். இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சோர்வில்லாமல் பணியாற்றுவார்கள். அண்ணாமலையும் கூட உயர் பொறுப்பு வகிப்பவர் என்ற அந்தஸ்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படலாம் என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.


கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை மாற்றப்பட்டபோதே அவரை வெகுவாக பாராட்டியிருந்தார் அமித்ஷா. இப்போது முக்கியப் பொறுப்பு அளிக்கப்படப் போவதாக அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இது அண்ணாமலை தரப்பை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

news

வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை

news

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!

news

சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!

news

விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!

news

நெருங்குதலும் விலகலும்

news

Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!

news

English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்