அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு.. அமித்ஷா அறிவிப்பால்.. உற்சாகத்தில் தமிழ்நாடு பாஜக

Jun 28, 2025,05:29 PM IST

டெல்லி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. என்ன பதவி என்று தெரியாமலேயே அவரைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் தொண்டர்கள்.


தேசிய அளவில் பதவி கொடுக்கப்பட்டாலும் கூட தமிழ்நாடு அரசியலிலும் அண்ணாமலை முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இது அவரது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.


அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் அண்ணாமலை அமர வைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் இந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்களுக்குத்தான் இந்த முக்கியப் பொறுப்பு வழக்கமாக அளிக்கப்படும். ஒரு வேளை அண்ணாமலைக்கு கிடைத்தால் அது பெரிய விஷயம்தான்.


மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் பாஜக அதிரடியாக வளர்ச்சி பெற்றது. அதி வேகமான கவனிப்பையும் அது ஈர்த்தது. திமுகவுக்கு கடும் போட்டி தரும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்ததால் அது அதிமுகவைக் கூட ஓரம் கட்டி விட்டு வேகமாக வளர்ந்து வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசப் போக அது பூகம்பமாக வெடித்து கூட்டணியை விட்டு அதிமுக விலகியது. அதன் பின்னர் அது தனித்தே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடுமையாக முயன்றது பாஜக.




கூட்டணி வேண்டும் என்றால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை மாற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. நயினார் நாகேந்திரன் தலைவரானார். இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சோர்வில்லாமல் பணியாற்றுவார்கள். அண்ணாமலையும் கூட உயர் பொறுப்பு வகிப்பவர் என்ற அந்தஸ்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படலாம் என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.


கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை மாற்றப்பட்டபோதே அவரை வெகுவாக பாராட்டியிருந்தார் அமித்ஷா. இப்போது முக்கியப் பொறுப்பு அளிக்கப்படப் போவதாக அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இது அண்ணாமலை தரப்பை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்