டெல்லி: தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. என்ன பதவி என்று தெரியாமலேயே அவரைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் தொண்டர்கள்.
தேசிய அளவில் பதவி கொடுக்கப்பட்டாலும் கூட தமிழ்நாடு அரசியலிலும் அண்ணாமலை முக்கியப் பங்கு வகிப்பார் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். இது அவரது ஆதரவாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஆனால் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பில் அண்ணாமலை அமர வைக்கப்படலாம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்றோர் இந்தப் பொறுப்பில் அமர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்களுக்குத்தான் இந்த முக்கியப் பொறுப்பு வழக்கமாக அளிக்கப்படும். ஒரு வேளை அண்ணாமலைக்கு கிடைத்தால் அது பெரிய விஷயம்தான்.
மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோதுதான் தமிழ்நாட்டில் பாஜக அதிரடியாக வளர்ச்சி பெற்றது. அதி வேகமான கவனிப்பையும் அது ஈர்த்தது. திமுகவுக்கு கடும் போட்டி தரும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடுகள் இருந்ததால் அது அதிமுகவைக் கூட ஓரம் கட்டி விட்டு வேகமாக வளர்ந்து வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசப் போக அது பூகம்பமாக வெடித்து கூட்டணியை விட்டு அதிமுக விலகியது. அதன் பின்னர் அது தனித்தே செயல்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கடுமையாக முயன்றது பாஜக.

கூட்டணி வேண்டும் என்றால் அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கக் கூடாது என்று அதிமுக திட்டவட்டமாக கூறி விட்டதால் வேறு வழியில்லாமல் அண்ணாமலையை மாற்றும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. நயினார் நாகேந்திரன் தலைவரானார். இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அவரது ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் சோர்வில்லாமல் பணியாற்றுவார்கள். அண்ணாமலையும் கூட உயர் பொறுப்பு வகிப்பவர் என்ற அந்தஸ்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படலாம் என்று பாஜக தலைமை கருதுகிறதாம்.
கடந்த ஏப்ரல் மாதம் அண்ணாமலை மாற்றப்பட்டபோதே அவரை வெகுவாக பாராட்டியிருந்தார் அமித்ஷா. இப்போது முக்கியப் பொறுப்பு அளிக்கப்படப் போவதாக அவர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். இது அண்ணாமலை தரப்பை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}