ஆப்கானிஸ்தானில் மீண்டும்.. மிதமான நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி!

Feb 20, 2024,10:56 AM IST

காபூல்:  ஆப்கானிஸ்தானின் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. 


ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். குறிப்பாக இந்துகுஷ் பிராந்தியம் அதிக அளவில் நிலநடுக்கங்களை சந்திக்கும் பகுதியாகும். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவபசமாக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மசார் இ சரீஃப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது என்பது நினைவிருக்கலாம்.




இந்நிலையில் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


ஆப்கானிஸ்தானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்