காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். குறிப்பாக இந்துகுஷ் பிராந்தியம் அதிக அளவில் நிலநடுக்கங்களை சந்திக்கும் பகுதியாகும். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவபசமாக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மசார் இ சரீஃப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}