ஆப்கானிஸ்தானில் மீண்டும்.. மிதமான நிலநடுக்கம்.. பொதுமக்கள் பீதி!

Feb 20, 2024,10:56 AM IST

காபூல்:  ஆப்கானிஸ்தானின் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. 


ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். குறிப்பாக இந்துகுஷ் பிராந்தியம் அதிக அளவில் நிலநடுக்கங்களை சந்திக்கும் பகுதியாகும். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவபசமாக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மசார் இ சரீஃப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது என்பது நினைவிருக்கலாம்.




இந்நிலையில் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 


ஆப்கானிஸ்தானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

அதிகம் பார்க்கும் செய்திகள்