காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். குறிப்பாக இந்துகுஷ் பிராந்தியம் அதிக அளவில் நிலநடுக்கங்களை சந்திக்கும் பகுதியாகும். இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவபசமாக மக்களுக்கு இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் மசார் இ சரீஃப் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பைசாத் அருகே நள்ளிரவு 12:10 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாத்திலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 130 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஏற்படும் தொடர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}