அடுத்தடுத்து சிக்கல்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு.. பிரச்சாரம் ரத்து!

Jul 18, 2024,11:28 AM IST

வாஷிங்டன்:   அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களைகட்டிய நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே விவாதங்களில் அவரது செயல்பாடு சர்ச்சையான நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பங்கேற்க இருந்த பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.


அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருக்கிறார். அதேபோல் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது  ஒரு நபர் டிரம்பை துப்பாக்கியால் சுட்டதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது நினைவிருக்கலாம். இதனைத் தொடர்ந்து இரு கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.




ஒரு பக்கம் டிரம்ப்பின் செல்வாக்கு ஏறி வருகிறது. மறுபக்கம் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவர் விவாதங்களில் சரியாக செயல்படவில்லை என்ற கருத்து வலுவாக உள்ளது. மேலும் அவரது வயதும் அவரது செயல்பாடுகளும் கூட அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பைடனுக்கு, 

கடந்த சில தினங்களாக சளி மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால் அதிபர் தேர்தலுக்காக பங்கேற்க இருந்த பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவருக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளன. ஏற்கனவே இவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அவர் உடல் நலமாக இருக்கிறார். தற்போது பைடன் டெலாவேர் நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இப்படி அடுத்தடுத்து சிக்கல் வருவதால் பைடன் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா அல்லது மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்