அகமதாபாத்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சூடு பறக்க மோதிக் கொண்டிருந்த நேரத்தில், விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது ஸ்டைலான தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலியை உற்சாகப்படுத்த அனுஷ்கா வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. ஆடம்பரத்தையும், எளிமையையும் இணைத்து அவர் ஒரு சிறந்த உடையில் பேஷன் ஐக்கான் போல வந்திருந்தார்.
எந்தவித ஆடம்பரமான உடைகளையும் அணியாமல், சாதாரணமாக ஜீன்ஸ் மற்றும் சட்டையில் அனுஷ்கா சர்மா மிகவும் ஸ்டைலாக காணப்பட்டார். அலெக்சாண்டர் வாங் வடிவமைத்த பருத்தி சட்டையை அனுஷ்கா அணிந்திருந்தார். இதன் விலை சுமார் $565 ஆகும்.

சட்டை எளிமையாக இருந்தாலும், அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. சாண்ட்ரோ பாரிஸ் நிறுவனத்தின் Rhinestone and Beaded Jeans-ஐ அணிந்திருந்தார். சட்டை மென்மையான தோற்றத்தை அளித்தாலும், ஜீன்ஸில் இருந்த கற்கள் மைதானத்தின் உற்சாகத்திற்கு ஏற்றவாறு அதிரடியாக இருந்தது.
அனுஷ்கா சர்மா எப்பவுமே சிம்பிளாக இருப்பதையே விரும்புவார். அதிக அளவில் மேக்கப்பெல்லாம் கூட போட மாட்டார். நேற்றும் கூட அப்படித்தான் கூலாக வந்திருந்தார். சருமம் பளபளப்பாகவும், தலைமுடி அலை அலையாகவும் இருந்தது. இது எல்லாவற்றையும் விட பெங்களூரு அணி கோப்பையை வென்றதும், தனது கணவர் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதியும் அனுஷ்காவை ரொம்பவே உற்சாகமாக்கி விட்டது.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}