சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு சேர விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மாறவுள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி 2 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்பவதற்காக கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்காக சேரக்கூடியவர்கள் இன்று முதல் ஆன்லைன்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதள பக்கங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு 1500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரினிவர்களுக்கு 250 ரூபாயும் பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
{{comments.comment}}