சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு சேர விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மாறவுள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி 2 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்பவதற்காக கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்காக சேரக்கூடியவர்கள் இன்று முதல் ஆன்லைன்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதள பக்கங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு 1500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரினிவர்களுக்கு 250 ரூபாயும் பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}