மாணவர்கள் கவனத்திற்கு: பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது!

May 06, 2024,01:39 PM IST

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு சேர விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.


இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மாறவுள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.


தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி 2 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்பவதற்காக கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்காக சேரக்கூடியவர்கள் இன்று முதல் ஆன்லைன்களில் விண்ணப்பங்களை  பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதள பக்கங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது. 


பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு 1500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரினிவர்களுக்கு 250 ரூபாயும் பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Short Story: புதுமைப்பெண்!

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

ஆதலால் காதல் செய்வீர்!

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!

news

தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்