சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு சேர விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது.
இன்று பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தேர்ச்சி அடைந்தவர்கள் கல்லூரி படிப்புகளுக்கு மாறவுள்ளனர். இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 450 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் படி 2 லட்சம் மாணவர்கள் சேர்வதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களை நிரப்பவதற்காக கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்காக சேரக்கூடியவர்கள் இன்று முதல் ஆன்லைன்களில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tneaonline.org அல்லது www.dte.gov.in என்ற இணையதள பக்கங்களின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜூலை 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர்களுக்கு 1500 ரூபாயும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரினிவர்களுக்கு 250 ரூபாயும் பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
Jai Shri Ram: ராம நாமத்தின் மகிமை!
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
{{comments.comment}}