சென்னை: இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடும் ஜூன் 2ம் தேதி தமிழக அரசால் பாரட்டு விழா நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்றது. இதன்மூலம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
லண்டன் செல்வதற்கு முன் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவிற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அதன்பின்னர் லண்டன் சென்று விட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் இளையராஜா திரை இசை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி தமிழக அரசு சார்பில் ஜூன் இரண்டாம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இளையராஜா ஜூன் 3ம் தேதி பிறந்தவர். ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்த நாள் என்பதனால், ஜூன் இரண்டாம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}