சென்னை: இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடும் ஜூன் 2ம் தேதி தமிழக அரசால் பாரட்டு விழா நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்றது. இதன்மூலம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

லண்டன் செல்வதற்கு முன் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவிற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அதன்பின்னர் லண்டன் சென்று விட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் இளையராஜா திரை இசை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி தமிழக அரசு சார்பில் ஜூன் இரண்டாம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இளையராஜா ஜூன் 3ம் தேதி பிறந்தவர். ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்த நாள் என்பதனால், ஜூன் இரண்டாம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}