சென்னை: இசைஞானி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடும் ஜூன் 2ம் தேதி தமிழக அரசால் பாரட்டு விழா நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா அண்மையில் மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சி கடந்த மார்ச் 8ம் தேதி நடைபெற்றது. இதன்மூலம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இவரை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
லண்டன் செல்வதற்கு முன் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவிற்கு சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அதன்பின்னர் லண்டன் சென்று விட்டு இளையராஜா திரும்பிய போது தமிழக அரசு சார்பில் அவரை விமான நிலையம் சென்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அரங்கேற்றம் முடிந்து திரும்பிய பிறகு முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று இளையராஜா சந்தித்து நன்றி தெரிவித்தார். அன்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் இளையராஜா திரை இசை பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி தமிழக அரசு சார்பில் ஜூன் இரண்டாம் தேதி இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
இளையராஜா ஜூன் 3ம் தேதி பிறந்தவர். ஜூன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பிறந்த நாள் என்பதனால், ஜூன் இரண்டாம் தேதி இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருப்புவனம் அஜித்குமார் மரணம்: நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: நீதிபதிகள்
Thiruppuvanam Custodial Death: அஜித்குமார் மரணம்.. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
தவெகவின் யானை சின்னத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி தொடர்ந்த வழக்கு... ஜூலை 3ல் தீர்ப்பு
வயசு 22தான்.. ஸ்டூண்ட்டாக நடித்த டுபாக்கூர் இளைஞர்.. 22 மெயில்களை கிரியேட் செய்து அதிரடி!
வலப்புறத்தில் அம்பாள்.. நுரையால் உருவான விநாயகர்.. திருவலஞ்சுழிநாதர் திருக்கோவில் அற்புதம்!
சிரித்தபடி சில்லறை தரும் கண்டக்டர்.. ஆச்சரியப்படுத்திய காரைக்குடி பஸ் அனுபவம்!
{{comments.comment}}