திருப்பதி லட்டு.. திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமையாளர் .. முன்ஜாமின் கோரி மனு

Sep 30, 2024,04:35 PM IST

திண்டுக்கல்:  ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்துள்ளார்.


திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இந்த சம்பவம் திருப்பதி கோவில்  மட்டும் இன்றி ஆந்திர அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு  சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அதோடு தரமில்லாத நெய் அனுப்பியதாக தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் பெயரையும் தெரிவித்திருந்தது திருப்பதி தேவஸ்தானம். இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாக பரவியது. அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விட்டதாக பக்தர்கள் கூறி வந்தனர்.


இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி  நிறுவனத்தின் மீது 10 பிரிவுகளில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தங்களது தரப்பில் எந்தக் கலப்படமும் செய்யவில்லை எனக்கூறி திருப்பதி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்