திண்டுக்கல்: ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவன உரிமையாளர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். இந்த சம்பவம் திருப்பதி கோவில் மட்டும் இன்றி ஆந்திர அரசியலிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு துறை அலுவலகத்தில் திருப்பதி லட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது அதில் நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அதோடு தரமில்லாத நெய் அனுப்பியதாக தமிழகத்தை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் பெயரையும் தெரிவித்திருந்தது திருப்பதி தேவஸ்தானம். இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாக பரவியது. அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத்திற்கு களங்கம் விளைவித்து விட்டதாக பக்தர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் அனுப்பிய விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் மீது 10 பிரிவுகளில் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனர் ராஜசேகர் முன்ஜாமீன் கோரி திருப்பதி மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், தங்களது தரப்பில் எந்தக் கலப்படமும் செய்யவில்லை எனக்கூறி திருப்பதி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}