சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் கான்பரன்ஸ் கால் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி அனுமதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி பெரம்பூரில் பத்து பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் தொடர்பாக பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் கிடையாது என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் ஆஜர்படுத்த அனுமதிக்குமாறு போலீசார் முறையீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலையை நேரில் பார்த்த ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்தி, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}