டெல்லி: அமித் ஷாவை பிரதமர் பதவியில் அமர்த்த நரேந்திர மோடி முயல்கிறார். அவருக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகப் போகிறது. அதற்குப் பிறகு அவரை பதவியில் நீடிக்க விட மாட்டார்கள். எனவே அமித்ஷாதான் அடுத்த பிரதமராக முயன்று வருகிறார் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
மதுக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜூன் 1ம் தேதி அவரை பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறி வைத்து அனல் பறக்க பேச ஆரம்பித்துள்ளார் கெஜ்ரிவால்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்கள் கேட்கிறார்கள். முதலில் உங்களது பிரதமர் வேட்பாளர் யார்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்.. அதைச் சொல்லுங்கள்.. மோடிக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 75 வயதாகிறது. இதே மோடிதான், கடந்த 2014ம் ஆண்டு புதிய விதிமுறையைக் கொண்டு வந்தார். அதாவது 75 வயதுடன் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற பாஜகவின் விதியை நினைவூட்ட விரும்புகிறேன்.
இதே விதியைக் காரணம் காட்டித்தான் அவர்கள் அத்வானிக்கு ஓய்வளித்தார்கள், முரளி மனோகர் ஜோஷிக்கு ஓய்வு கொடுத்தார்கள். சுமித்ரா மகாஜனுக்கு ஓய்வு தந்தார்கள். அதேபோல மோடியும் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார். அவர் தற்போது வாக்கு சேகரிப்பது அவருக்காக அல்ல.. மாறாக அமித் ஷாவுக்காக. அமித் ஷா பிரதமரானால், மோடியின் கியாரண்டிகளை நிறைவேற்றுவாரா என்று கேட்க நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் இது பெரும் பரபரப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அமித் ஷா கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணி கம்பெனியின் கவனத்திற்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சொல்வது போல பாஜகவில் 75 வயதில் ஓய்வு என்ற விதிமுறையே முதலில் கிடையாது. அப்படி ஒரு விஷயம் பாஜக அரசியல் சாசனத்திலேயே இல்லை. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார். முழுமையாக 5 ஆண்டுகளை அவர் பூர்த்தி செய்வார். அதில் பாஜகவுக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். நிரந்தர ஜாமீனில் அல்ல.. மீண்டும் அவர் சிறைக்குப் போயாக வேண்டும். அதை மறந்து விட்டு அவர் பேசுகிறார். இந்த இடைக்கால ஜாமீனை ஏதோ தன்னை குற்றவாளி அல்ல என்று அவர் புரிந்து கொண்டால் அது அவரது அறியாமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார் அமித் ஷா.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}