நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்

Dec 31, 2023,04:06 PM IST

டில்லி : நிதி கமிஷனின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருந்தவர் ஆவார்.


நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியாவை நாட்டின் 16வது நிதி கமிஷன் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. நிதி கமிஷனின் செயலாளராக ரித்விக் ரஞ்சனம் பாண்டே செயலாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி கமிஷனில் இடம் பெற உள்ள மற்ற உறுப்பினர்களின் விபரங்களும் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . 




இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநரான அரவிந்த் பனகாரியா, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் பொருளாதாரம் குறித்து கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தவர். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நிதி ஆயோக் துணத தலைவர் பதவி விகித்த இவர் அதிலிருந்து வெளியேறுவதாக திடீரென தெரிவித்தார். மத்திய அரசுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இவர் நிதிஆயோத் துணை தலைவர் பதவியில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஆனால் திட்ட கமிஷனை முறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த பணியின் காரணமாக அவர் துணைதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


2026 ம் ஆண்டில் இந்தியா உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி பெற்றிருக்கும் என அரவிந்த் பனகாரியா இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா சராசரி ஆண்டு வளர்ச்சி 10.22 சதவீதமாக  இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்