நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்

Dec 31, 2023,04:06 PM IST

டில்லி : நிதி கமிஷனின் புதிய தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நிதி ஆயோக்கின் துணை தலைவராக இருந்தவர் ஆவார்.


நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவராக இருந்த அரவிந்த் பனகாரியாவை நாட்டின் 16வது நிதி கமிஷன் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. நிதி கமிஷனின் செயலாளராக ரித்விக் ரஞ்சனம் பாண்டே செயலாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி கமிஷனில் இடம் பெற உள்ள மற்ற உறுப்பினர்களின் விபரங்களும் தனித்தனியாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . 




இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநரான அரவிந்த் பனகாரியா, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியல் பொருளாதாரம் குறித்து கற்றுத்தரும் பேராசிரியராக இருந்தவர். 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நிதி ஆயோக் துணத தலைவர் பதவி விகித்த இவர் அதிலிருந்து வெளியேறுவதாக திடீரென தெரிவித்தார். மத்திய அரசுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இவர் நிதிஆயோத் துணை தலைவர் பதவியில் இருந்து விலகியதாக சொல்லப்பட்டது. ஆனால் திட்ட கமிஷனை முறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அந்த பணியின் காரணமாக அவர் துணைதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


2026 ம் ஆண்டில் இந்தியா உலகின் 3வது மிகப் பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி பெற்றிருக்கும் என அரவிந்த் பனகாரியா இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா சராசரி ஆண்டு வளர்ச்சி 10.22 சதவீதமாக  இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்