சென்னை: தங்கத்தின் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. ஐப்பசி மாதம் பிறந்து விட்டதால் இனி தங்கத்தின் விலை உயர்விலேயே இருக்கும் என்று தெரிகிறது.
நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்திருந்த தங்கம் இன்றும் உயர்வை நோக்கி சென்று மேலும் சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தால் மக்கள் ஷாக்காகி போய் உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் துவங்கி உள்ளது. நேற்றும் இன்றும் சேர்ந்து சவரனுக்கு ரூ. 580 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5585 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44680 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6093 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 22 ரூபாய் அதிகமாகும்.
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை நேற்றைய விலையை விட இன்று குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து இன்று ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.50 காசாக உள்ளது.
புரட்டாசியில் குறைந்திருந்த தங்கம் விலை ஐப்பசி தொடங்கியதில் இருந்தே ஏற்றம் கண்டு வருகிறது. இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை உயர்ந்தே இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}