யாராச்சும் ராஜா சார் பாட்டு போடுங்க.. குளுகுளு மழை.. குஷியான அஸ்வின்!

Sep 11, 2023,03:48 PM IST
கொழும்பு: இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசியா கோப்பை போட்டி இன்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் போட்ட டிவீட்டால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசியா கோப்பை போட்டி நேற்று கொழும்பில் நடைபெறுவதாக இருந்தது. இது இந்த இரு அணிகளும் மோதும் 2வது போட்டியாகும். கண்டியில் நடந்த முதல் போட்டியும் மழை காரணமாக பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டது. நேற்றைய போட்டியும் கூட மழையால் பாதிக்கப்பட்டது.



ரிசர்வ் தினமான இன்று போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றும் மழை காரணமாக போட்டியை நடத்த முடியாமல் தாமதமாகி வருகிறது. பலத்த மழையால் இன்றைய போட்டியும் நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

இப்படிப்பட்ட பலத்த மழை பெய்யும் சீசனில் இலங்கையில் ஏன் போட்டியை வைத்தார்கள் என்று பலரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் ஒரு டிவீட் போட்டுள்ளார். மழை பெய்யும் காட்சியும், மைதானத்தில் பிட்ச் மீது பெரிய தார்ப்பாய் போட்டு மூடியிருக்கும் புகைப்படம் உள்ளது.

கூடவே கேப்ஷனாக,யாராவது இளையராஜா சார் பாட்டு போடுங்க அப்படியே சூடா ஒரு டீ என்று ஜாலியாக போட்டுள்ளார் அஸ்வின்.  அதற்கு ஒருவர் போட்டுள்ள கமென்ட்டில், பேசாமல் வீரர்கள் எல்லோரும் அருகில் உள்ள தியேட்டருக்குப் போய் ஜவான் படம் பார்த்து விட்டு வரலாம் .. அதுக்குள்ள மழையும் விட்டுரும் என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்