"இந்தியா"வை மாற்றிய அஸ்ஸாம் முதல்வர்.. மாற்ற விரும்பாத "டிவிட்டர்"

Jul 19, 2023,02:13 PM IST
குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனது டிவிட்டர் பயோவில் இருந்த இந்தியா என்ற வார்த்தையை பாரத் என்று மாற்றியுள்ளார். ஆனால் டிவிட்டரைப் பொறுத்தவரை அது இன்னும் இந்தியா என்றுதான் காட்டுகிறது. பார்க்கவே முரண்பாடாக தெரிகிறது இது.

பெங்களூரில் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக் கூட்டத்தில் தங்களது கூட்டணியின் பெயரை I.N.D.I.A என்று வைத்திருப்பதாக அறிவித்தனர். இது நாடு முழுவதும் பேசு பொருளாகி விட்டது. மிகவும் வேகமாக இந்த பெயர் வைரலானது. மக்களிடையே இது பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



எப்படி இப்படி யோசிச்சாங்க என்று பலரும் ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவு இந்த பெயர் விளங்குகிறது. வெகு வேகமாக இந்த பெயர் மக்கள் மத்தியிலும் பரவி விட்டது. நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதனால் கடுப்பாகியுள்ள பாஜகவினர் இந்தியா என்ற வார்த்தைக்குப் பதில் பாரத் என்ற இந்திப் பெயரை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா முதல் ஆளாக தனது டிவிட்டர் பயோவில் இருந்த இந்தியா என்ற பெயரை தூக்கி விட்டு பாரத்தை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட்டும் போட்டுள்ளார். அதில், நமது நாகரீக சமுதாயம், இந்தியா மற்றும் பாரத்தை சேர்ந்துதான் உருவானது. பாரதத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள்தான் இந்தியா என்று பெயரிட்டனர். இதுபோன்ற அடிமை தளை போதையிலிருந்து நாம் இன்னும் விடுதலை பெற வேண்டியுள்ளது. நமது முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினர். அந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது, என்றும் தொடரும். பாரதத்திற்காக பாஜக என்று கூறியுள்ளார் ஹிமந்தா.

என்னதான் ஹிமந்தா தனது பயோவில் பாரத் என்று மாற்றினாலும் கூட  அதே பயாவில் குவஹாத்தி, இந்தியா என்றுதான் வருகிறது. அதாவது ஹிமந்தா மாற்ற விரும்பினாலும், டிவிட்டர் நிறுவனம் இந்தியாவை மாற்றவில்லை என்பது பார்க்கவே வித்தியாசமாக உள்ளது.

ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தவர்தான் ஹிமந்தா பிஸ்வா. அவர் மீது அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்குத் தொடர்ந்திருந்தன. இந்த நிலையில்தான் அவர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அஸ்ஸாம் முதல்வரானார். காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளராக ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டு வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்