சென்னை: லியோ புயலால் அத்தனை பேரும் பாதிக்ககப்பட்டுக் கிடக்க சத்தமில்லாமல் ஒரு கம்பெனியை ஆரம்பித்து அதற்கு முதலாளியாகியுள்ளார் நடிகர் அஜீத்குமார்.
நடிகர் அஜீத் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமானவர். நடிகராக வருவதற்கு முன்பு மெக்கானிக்காக இருந்தவர். நடிக்க வந்த பின்பும் கூட அதை ஒரு தொழிலாகத்தான் பார்த்தார். ஆரம்பத்திலிருந்தே தான் உண்டு தனது தொழில் உண்டு என்று மட்டுமே இருப்பவர். தேவையில்லாமல் எதிலும் தலையிடவும் மாட்டார். பேசவும் மாட்டார்.

இந்த நிலையில் சமீப காலமாக பல்வேறு ஊர்களுக்கும் அவர் பைக்கிலேயே ரைடு போய்க் கொண்டிருந்தார். சரித்தான் பொழுது போகவில்லை அல்லது ஜாலியான அனுபவத்திற்காக செல்கிறார் என்றுதானை் பலரும் நினைத்தனர். அவர் ஒரு பைக் பிரியர், ரேசரும் கூட. எனவே பைக் ரைடுகளின் மீது அலாதிப் பிரியமாக இருக்கிறார் என்று நினைத்தனர்.
ஆனால் இந்த பைக் பயண அனுபவத்தை வைத்து ஒரு நிறுவனத்தையே ஆரம்பித்து விட்டார் அஜீத். வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் அஜீத். இந்த நிறுவனம் மோட்டார் சைக்கிள் பயணம் செய்ய விரும்புவோருக்கு உதவும். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சி மற்றும் அனுபவம் வாய்ந்த ரைடர் உங்களுடன் கூடவே வருவார். உங்களுக்கு பல்வேறு ஊர்களையும் சுற்றிக் காட்டுவார்.. பயணத்தின்போது எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து முறையான வழிகாட்டுவார். அருமையான அனுபவம் உங்களுக்குக் கிடைக்க அவர் உதவி செய்வார்.

தற்போதைக்கு ராஜஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் வீனஸ் நிறுவனம் தனது சேவையை மேற்கொள்ளவுள்ளது. பைக்குகளை வாடகைக்கு விடுவது, சுற்றுலா உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் மேற்கொள்ளும். இதன் சேவை அக்டோபர் 23ம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்.
rm@RideWithVenus.com
புதுவருட டைரி!
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
{{comments.comment}}