சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நடிகை திரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகை திரிஷா குறித்து அபத்தமாகவும், அவதூறாகவும் பேசினார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் ராஜு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.

தற்போது நடிகை திரிஷா தரப்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திரிஷாவின் வக்கீல்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில், அடுத்த 24 ணி நேரத்திற்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும்.
ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}