டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் மோதலில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது. பயங்கரவாத சியோனிச (இஸ்ரேல்) ஆட்சிக்கு ஈரான் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்ததையடுத்து, கமேனியின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளிவந்துள்ளது. பெருமைமிக்க ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 இன் 11வது அலை, ஃபத்தா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இடை மறித்து தாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரைத் தாக்கின. தாக்குதலுக்கு முன், பொதுமக்கள் வெளியேற வேண்டும் என சமூக ஊடகங்களில் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. டெஹ்ரானின் பிருசி, சபலன் மற்றும் சய்யாத் பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
என்னது பிரியாணி இல்லையா?...தேர்தல் விலைப்பட்டியலில் பிரியாணி 'மிஸ்சிங்': அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பாமக ராமதாஸின் அன்புமணிக்கு எதிரான வழக்கு: தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
த்ரிஷா பிரச்சனையே தீரல...அதுக்குள்ள நயன்தாராவா? தொடரும் நடிகர்,நடிகைகள் மீதான விமர்சனம்
காலம் காத்திருந்து பதில் சொல்லும்...ஆதவ் அர்ஜூன் கருத்திற்கு ரஜினிகாந்த் பதில்
புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: 1,111 தேர்தல் பார்வையாளர்களை நியமினம்
சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
கேஸ் சிலிண்டர் பெற இனி biometric கட்டாயம்...மத்திய அரசு அதிரடி
திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கண்டன ஆர்ப்பாட்டம்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி ஆவேச உரை
{{comments.comment}}