இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

Jun 18, 2025,04:11 PM IST

டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் மோதலில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.


ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது. பயங்கரவாத சியோனிச (இஸ்ரேல்) ஆட்சிக்கு ஈரான் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.


இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்ததையடுத்து, கமேனியின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளிவந்துள்ளது. பெருமைமிக்க ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 இன் 11வது அலை, ஃபத்தா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.




மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இடை மறித்து தாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. 


முன்னதாக, புதன்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரைத் தாக்கின. தாக்குதலுக்கு முன், பொதுமக்கள் வெளியேற வேண்டும் என சமூக ஊடகங்களில் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. டெஹ்ரானின் பிருசி, சபலன் மற்றும் சய்யாத் பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

அதிகம் பார்க்கும் செய்திகள்