இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

Jun 18, 2025,04:11 PM IST

டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் மோதலில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.


ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது. பயங்கரவாத சியோனிச (இஸ்ரேல்) ஆட்சிக்கு ஈரான் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.


இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்ததையடுத்து, கமேனியின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளிவந்துள்ளது. பெருமைமிக்க ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 இன் 11வது அலை, ஃபத்தா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.




மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இடை மறித்து தாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. 


முன்னதாக, புதன்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரைத் தாக்கின. தாக்குதலுக்கு முன், பொதுமக்கள் வெளியேற வேண்டும் என சமூக ஊடகங்களில் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. டெஹ்ரானின் பிருசி, சபலன் மற்றும் சய்யாத் பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்