டெஹ்ரான்/டெல் அவிவ்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஆறாவது நாளாகத் தொடர்ந்து வரும் மோதலில், இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதுகுறித்து ஈரான் மதத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி, தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில், இறைவனின் பெயரால், போர் தொடங்குகிறது. பயங்கரவாத சியோனிச (இஸ்ரேல்) ஆட்சிக்கு ஈரான் ஒரு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்ததையடுத்து, கமேனியின் இந்த கடுமையான எச்சரிக்கை வெளிவந்துள்ளது. பெருமைமிக்க ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3 இன் 11வது அலை, ஃபத்தா-1 ஏவுகணைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது என்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட அறிக்கையில் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக டிரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை இடை மறித்து தாக்கும் முயற்சியில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
முன்னதாக, புதன்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரானிய தலைநகரைத் தாக்கின. தாக்குதலுக்கு முன், பொதுமக்கள் வெளியேற வேண்டும் என சமூக ஊடகங்களில் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. டெஹ்ரானின் பிருசி, சபலன் மற்றும் சய்யாத் பகுதிகளில் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}