அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப் போறாங்க.. 3 மாநிலங்களில் அந்த நாளில்.. மதுக் கடைகளுக்கு லீவு!

Jan 12, 2024,12:20 PM IST

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் திறப்பையொட்டி ஜனவரி 22ம் தேதி சில மாநிலங்களில் மதுக் கடைகளுக்கு அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராமரின் குழந்தைப் பருவ சிலை புதிதாக கட்டப்பட்டுள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் பிரமுகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஜனவரி 22ம் தேதி அயோத்திக்கு வருகை தரவுள்ளனர். இந்த விழாவை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாட பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தடபுடலாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் அன்றைய தினம் அதாவது ஜனவரி 22ம் தேதி சில மாநிலங்களில் மதுக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பனை முழுமையாக தடை செய்யப்படுவதாக இந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மது விற்பனை மட்டுமல்லாமல், ஹோட்டல்கள், பார்களிலும் கூட மது பரிமாறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.



சமீபத்தில் காங்கிரஸ் வசமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய சட்டிஸ்கர் மாநிலத்தில்தான் முதலில் இந்த மது விற்பனைத் தடை அறிவிப்பு வெளியானது. மொத்த மாநிலத்திலும் ஜனவரி 22ம் தேதி மதுவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்துள்ளார்.

அதேபோல பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநில்ததிலும், மது விற்பனைத் தடையை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

அயோத்தி இடம் பெற்றுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஜனவரி 22ம் தேதி மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஜனவரி 22ம் தேதியை தேசிய விழாவாக கொண்டாடுவோம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அன்றைய தினம் கல்விக் கூடங்களுக்கும் உ.பி. அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மதுக் கடைகளுக்கு விடுமுறை விட்டுள்ள 3 மாநிலங்களும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் இதுபோல விடுமுறை விடப்படுமா என்பது தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்