ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான முகம்மது அசாருதீன் போட்டியிடுகிறார். அவர் ஜுபிளி ஹில்ஸ் தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளார்.
தெலங்கானாவில் தொடர்ச்சியான 2வது முறையாக கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலம் உருவானது முதலே பி.ஆர். எஸ் கட்சிதான் ஆட்சி புரிந்து வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் கேசிஆர் கட்சி 119 இடங்களில் போட்டியிட்டது. அதில் 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. தற்பொழுது கேசிஆர் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி பலமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தெலங்கானாவில் தேர்தல் களம் அனல் பறக்கக் காணப்படுகிறது. மறுபக்கம் பாஜகவும் ஏதாவது செய்து கேசிஆர் ஆட்சியை கீழிறக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எல்லோரையும் விட படு வேகமாக களமாடி வருகிறது.
தெலங்கானாவில் சில வாரங்களுக்கு முன்னர் தான் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டார். கேசிஆர் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தெலங்கானா தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. நவ. 30ம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 55 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், தற்போது 45 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன் இடம் பிடித்துள்ளார்.
அசாருதீன் எம்.பியாக இருந்தவர். அவர் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட காங். மேலிடம் சீட் வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் தொடங்கிய SSLC பொதுத்தேர்வு: 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?
பெண்ணாக இருப்பதே பெருமை.. The Pride of Being a Woman (Short Story)
பத்தாம் வகுப்பு மாணவர்களே.. இம்புட்டு விஷயம் உங்களுக்கு இருக்கு.. ரிலாக்ஸா இருங்க!
சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
Tamil Nadu Assembly Elections 2026: "ஹீரோ"வை எப்போது களம் இறக்கப் போகிறது திமுக?
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை முடிக்க அதிமுக தீவிரம்
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
{{comments.comment}}