ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியுமான முகம்மது அசாருதீன் போட்டியிடுகிறார். அவர் ஜுபிளி ஹில்ஸ் தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளார்.
தெலங்கானாவில் தொடர்ச்சியான 2வது முறையாக கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலம் உருவானது முதலே பி.ஆர். எஸ் கட்சிதான் ஆட்சி புரிந்து வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தலில் கேசிஆர் கட்சி 119 இடங்களில் போட்டியிட்டது. அதில் 88 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. தற்பொழுது கேசிஆர் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சி பலமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தெலங்கானாவில் தேர்தல் களம் அனல் பறக்கக் காணப்படுகிறது. மறுபக்கம் பாஜகவும் ஏதாவது செய்து கேசிஆர் ஆட்சியை கீழிறக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எல்லோரையும் விட படு வேகமாக களமாடி வருகிறது.
தெலங்கானாவில் சில வாரங்களுக்கு முன்னர் தான் ராகுல் காந்தி பேரணியில் கலந்து கொண்டார். கேசிஆர் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் காங்கிரஸ் இந்தாண்டு இறுதியில் நடக்கும் தெலங்கானா தேர்தலை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. நவ. 30ம் தேதி அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 55 வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், தற்போது 45 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான முகமது அசாருதீன் இடம் பிடித்துள்ளார்.
அசாருதீன் எம்.பியாக இருந்தவர். அவர் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட காங். மேலிடம் சீட் வழங்கியுள்ளது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}