குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. இதனால், கோடை காலத்திலும் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குற்றாலத்தில் குவிந்தனர். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தற்பொழுது அதிகரித்துள்ளது.
கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக குற்றால அருவிகளில் மக்கள் கூட்டம் சற்று அதிகரித்தே உள்ளது. கடந்த சில நாட்களாக அருவிகளில் நீர் வரத்து வந்ததால் இங்கு சுற்றுலா பயணிகள் காலை முதலே அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றாலத்தில் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த காட்டாற்று வெள்ளத்தில், அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் பலியானார். இதன் காரணமாக குற்றால அருவிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி தொடர்ந்து இப்பகுதிகளில் மழை பெய்து வருவதினால், ஐந்தறிவி பகுதியில் அபாய ஒலி எழுப்பப்பட்டு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தொடர் கனமழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றால ஐந்து அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}