வங்கதேசத்தில் பயங்கரம்.. ஏரியில் பிணமாக மிதந்த.. 32 வயதேயான இளம் பெண் பத்திரிகையாளர்!

Aug 28, 2024,06:48 PM IST

டாக்கா: நிலையான அரசு இல்லாமல் இடைக்கால அரசின் தலைமையில் இயங்கி வரும் வங்கதேசத்தில், இளம் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏரியில் பிணமாக மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.


அந்தப் பெண் பத்திரிகையாளரின் பெயர் சாரா ரஹ்னாமா. 32 வயதான அவர் காஸி டிவி என்ற தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். கோலம் தஸ்தகிர் காஸி என்பவருக்குச் சொந்தமான டிவி இது. வங்கதேசத்தில் மக்கள் புரட்சி வெடித்து ராணுவத்தின் துணையுடன் இடைக்கால அரசு அமைந்ததும் காஸி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சாராவின் மரணம் வந்துள்ளது.


டாக்காவில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் அவரது உடல் பிணமாக மிதந்தது. சாகர் என்ற இளைஞர் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டனர்.




இது மேலும் ஒரு கொடூரமான மரணம், ஜனநாயகத்தின் மீதும், கருத்து சுதந்திரத்தின் மீதும் நடந்துள்ள மோசமான தாக்குதல் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸத் கூறியுள்ளார்.


தனது மரணத்திற்கு முதல் நாள்தான் சாரா ஒரு பேஸ்புக் பதிவைப் போட்டிருந்தார். பாஹிம் பைசல் என்பவரை டேக் செய்து அவர் போட்டிருந்த அந்தப் பதிவில், உன்னைப் போன்ற நல்ல நண்பன் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. உன்னை கடவுள் எப்போதும் ஆசிர்வதிக்கட்டும். உனது கனவுகள் விரைவில் நனவாகும் என்று நம்புகிறேன்.  இருவரும் இணைந்து நிறைய திட்டமிட்டிருந்தோம். ஆனால் நமது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. உன்னை கடவுள் ஆசிர்வதிப்பார் என்று எழுதியிருந்தார் சாரா.


இன்னொரு பதிவில், வாழ்வதை விட சாவதே சிறந்தது என்று எழுதியிருந்தார் சாரா. இதை வைத்து அவர் தற்கொலை மூலம் தனது உயிரை முடித்துக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேசமயம், சாரா கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்