Bangalore Bandh: கொதிக்கும் காவிரி.. தகிக்கும் கன்னட அமைப்புகள்.. பிசுபிசுத்தது பந்த்!

Sep 26, 2023,09:34 AM IST
பெங்களூரு: காவிரி பிரச்சினை தொடர்பாக கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்த பெங்களூர் பந்த்  போராட்டத்துக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் அது பிசுபிசுத்தது.

தமிழ்நாடு பஸ்கள் வராததால் ஓசூர் சாலை மட்டுமே வெறிச்சோடிக் காணப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து பஸ்கள், லாரிகள் போன்ற பெரிய வண்டிகள் எதுவும் வரவில்லை. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.

மற்றபடி பெங்களூர் முழுவதும் பஸ்கள் ஓடுகின்றன, ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் அவை மூடப்பட்டிருந்தன. பெரும்பாலான தனியார் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை இன்று கொடுத்திருந்ததால் பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று கூறி பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று பெங்களூர் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.  சில இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேசமயம், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவை திறந்துள்ளன. அவற்றுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெங்களூரு  முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்க்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதாவது பிரச்சினையைச் சந்தித்தால் 112ம் எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்