தக்காளி எதுக்கு.. நாங்க தக்காளி லாரியையே தூக்குவோம்ல!

Jul 23, 2023,03:37 PM IST
பெங்களூரு : பெங்களூருவில் தக்காளி ஏற்றி சென்ற லாரியையே பிளான் பண்ணி கடத்தி சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திய தக்காளியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.

ஷிவன்னா என்ற விவசாயி ஜூலை 08 ம் தேதி சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் இருந்து தக்காளிகளை ஏற்றிக் கொண்டு கோலார் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். லாரி, சிக்கஜலா பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பாஸ்கரன் - சிந்துஜா தம்பதி, ராக்கி மற்றும் குமார் என்பவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு லாரியை வழி மறித்துள்ளனர். தாங்கள் வந்த வாகனம் பழுதடைந்து விட்டதால் தங்களை லாரியில் ஏற்றிக் கொள்ளுமாறு ஷிவன்னாவை கேட்டுள்ளனர்.




லாரியில் ஏறியதும் நான்கு பேரும் ஷிவன்னாவை மிரட்டி, அவரை பாதி வழியிலேயே லாரியில் இருந்து தள்ளி விட்டு விட்டு, தக்காளி லாரியை தமிழகத்தின் வாணியம்பாடி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். தக்காளி லோடுடன் இருந்த லாரியைப் பறி கொடுத்து தவித்துப் போன ஷிவன்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் தக்காளி ஏற்றி வந்த லாரியை கண்டுபிடித்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாஸ்கரன் மற்றும் சிந்துஜா, அவர்களுடன் வந்த இரண்டு பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாஸ்கரன் மற்றும் சிந்துஜாவை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது திருட்டு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் மார்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக தக்காளி விலை உச்சத்திலேயே உள்ளது. விலைச்சல் சரிந்ததால் தக்காளி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்கும் காரணத்தால் இவர்கள் தக்காளியை லாரியை கடத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்