தக்காளி எதுக்கு.. நாங்க தக்காளி லாரியையே தூக்குவோம்ல!

Jul 23, 2023,03:37 PM IST
பெங்களூரு : பெங்களூருவில் தக்காளி ஏற்றி சென்ற லாரியையே பிளான் பண்ணி கடத்தி சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திய தக்காளியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.

ஷிவன்னா என்ற விவசாயி ஜூலை 08 ம் தேதி சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் இருந்து தக்காளிகளை ஏற்றிக் கொண்டு கோலார் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். லாரி, சிக்கஜலா பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பாஸ்கரன் - சிந்துஜா தம்பதி, ராக்கி மற்றும் குமார் என்பவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு லாரியை வழி மறித்துள்ளனர். தாங்கள் வந்த வாகனம் பழுதடைந்து விட்டதால் தங்களை லாரியில் ஏற்றிக் கொள்ளுமாறு ஷிவன்னாவை கேட்டுள்ளனர்.




லாரியில் ஏறியதும் நான்கு பேரும் ஷிவன்னாவை மிரட்டி, அவரை பாதி வழியிலேயே லாரியில் இருந்து தள்ளி விட்டு விட்டு, தக்காளி லாரியை தமிழகத்தின் வாணியம்பாடி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். தக்காளி லோடுடன் இருந்த லாரியைப் பறி கொடுத்து தவித்துப் போன ஷிவன்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் தக்காளி ஏற்றி வந்த லாரியை கண்டுபிடித்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாஸ்கரன் மற்றும் சிந்துஜா, அவர்களுடன் வந்த இரண்டு பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாஸ்கரன் மற்றும் சிந்துஜாவை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது திருட்டு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் மார்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக தக்காளி விலை உச்சத்திலேயே உள்ளது. விலைச்சல் சரிந்ததால் தக்காளி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்கும் காரணத்தால் இவர்கள் தக்காளியை லாரியை கடத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நா ளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!

news

நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

அதிகம் பார்க்கும் செய்திகள்