தக்காளி எதுக்கு.. நாங்க தக்காளி லாரியையே தூக்குவோம்ல!

Jul 23, 2023,03:37 PM IST
பெங்களூரு : பெங்களூருவில் தக்காளி ஏற்றி சென்ற லாரியையே பிளான் பண்ணி கடத்தி சென்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திய தக்காளியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.

ஷிவன்னா என்ற விவசாயி ஜூலை 08 ம் தேதி சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் இருந்து தக்காளிகளை ஏற்றிக் கொண்டு கோலார் மார்கெட்டிற்கு சென்றுள்ளார். லாரி, சிக்கஜலா பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது பாஸ்கரன் - சிந்துஜா தம்பதி, ராக்கி மற்றும் குமார் என்பவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு லாரியை வழி மறித்துள்ளனர். தாங்கள் வந்த வாகனம் பழுதடைந்து விட்டதால் தங்களை லாரியில் ஏற்றிக் கொள்ளுமாறு ஷிவன்னாவை கேட்டுள்ளனர்.




லாரியில் ஏறியதும் நான்கு பேரும் ஷிவன்னாவை மிரட்டி, அவரை பாதி வழியிலேயே லாரியில் இருந்து தள்ளி விட்டு விட்டு, தக்காளி லாரியை தமிழகத்தின் வாணியம்பாடி பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். தக்காளி லோடுடன் இருந்த லாரியைப் பறி கொடுத்து தவித்துப் போன ஷிவன்னா அளித்த புகாரின் பேரில் போலீசார் தக்காளி ஏற்றி வந்த லாரியை கண்டுபிடித்து விட்டனர். தலைமறைவாக இருக்கும் பாஸ்கரன் மற்றும் சிந்துஜா, அவர்களுடன் வந்த இரண்டு பேரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று பாஸ்கரன் மற்றும் சிந்துஜாவை போலீசார் கைது செய்து, அவர்கள் மீது திருட்டு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் மார்கெட்டில் தக்காளி விலை தாறுமாறாக ஏறி உள்ளது. கிட்டதட்ட ஒரு மாதமாக தக்காளி விலை உச்சத்திலேயே உள்ளது. விலைச்சல் சரிந்ததால் தக்காளி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்கும் காரணத்தால் இவர்கள் தக்காளியை லாரியை கடத்தி இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்