பெங்களூரு: பெங்களூருவில், பெண்கள் அணியும் நைட்டியைப் போட்டுக் கொண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புகுந்து விலை உயர்ந்த ஷூ, செருப்புகளை ஒரு நபர் திருடி வருகிறார். இதுகுறித்து சிசிடிவி கேமரா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டில் எப்பவுமே திருடர்கள்தான் ரொம்ப மூளையை செலவழிப்பார்கள் போல.. தினுசு தினுசான திருட்டு முறைகளை அமல்படுத்தி, போலீஸாரின் தலையை சுற்றி வைத்து விடுகிறார்கள் சமயத்தில். "கும்பலா உக்காந்து சூட் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் டெக்னிக் நம்மளை திகைக்க வைக்கிறது.
பெங்களூரில் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, ஒரு திருடன் பிடிபட்டான்.. போலீஸாரின் நைட் ரவுண்ட்ஸின்போது அவன் சிக்கினான். டிப்டாப்பாக இருந்த அவன் புல்லட்டில் சந்தேகத்திற்கு இடமாக வந்தபோது சிக்கினான். பிடித்து விசாரித்தபோது அவன் திருடன் என்றும், வெறும் புல்லட் பைக்குகளை மட்டுமே அவன் திருடுவான் என்றும் தெரிய வந்தது. தமிழ்நாட்டிலிருந்து இரவு பெங்களூருக்கு வருவானாம்.. இரவில் ஏதாவது புல்லட்டை திருடிக் கொண்டு அந்த வண்டியிலேயே தனது சொந்த ஊருக்குப் போய் விடுவான். அதை விற்றுக் காசாக்கி விட்டு ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, அடுத்த வாரம் மீண்டும் வருவான். புல்லட்டைத் தவிர வேறு எந்த பைக்கையும் அவன் திருட மாட்டான். அதாவது வீக் என்ட் மட்டும் வந்து திருடி விட்டு வாரம் முழுவதும் என்ஜாய் செய்வது அவனது வழக்கமாக இருந்தது.
இப்படி விதம் விதமான திருடர்கள் உலா வந்த பெங்களூரில், இப்போது இன்னும் ஒரு ஒரு நூதனத் திருடன் உலா வந்து கொண்டுள்ளான். இந்தத் திருடன் ஷூ, செருப்பை மட்டும் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்ன காமெடி என்றால் பெண்கள் அணியும் நைட்டியை அணிந்து கொண்டு இந்த நபர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இரவு நேரத்தில் இந்த நபர் வருகிறார். பெண் போன்ற தோற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக நைட்டியுடன் இந்த நபர் வருகிறார். அப்போதுதான் சிசிடிவியில் பெண் திருடுவது போல "அலிபி" ஏற்படுத்த முடியும் என்பதற்காக இந்த டெக்னிக்.
அள்ளிப் போடு அள்ளிப் போடு!
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நைஸாக நுழையும் இந்த நபர் வீடுகளுக்கு முன்பு கழற்றி விடப்பட்டுள்ள காஸ்ட்லியான செருப்புகளை மட்டும் குறி வைத்து திருடுகிறார். பெரிய கோணிப் பையை கையுடன் எடுத்து வரும் அந்த நபர் அதில் செருப்புகள், ஷூக்களை "அள்ளிப் போட்டு"க் கொண்டு செல்கிறார்.
சர்வ சாதாரணமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் நுழைவதும், செருப்பு, ஷூக்களை அள்ளிக் கொண்டு நிதானமாக அந்த நபர் செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீட்டில் திருடிய பிறகு வெளியே வந்து நைட்டியை கழற்றியபோதுதான் அந்த நபர் ஆண் என்பது தெரிய வந்தது.
பெங்களூரைச் சேர்ந்த அனில்குமார் என்பவர் இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதை வைத்து பெங்களூரு போலீஸார் தற்போது இந்த திருடனைப் பிடிக்க தீவிர வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}