சசிகலா, இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு

Sep 05, 2023,09:55 AM IST
பெங்களூரு : தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் சசிகலா மற்றும் இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் அவரது உறவினரான இளவரசியும் அடைக்கப்பட்டிருந்தார்.



சிறையில் இருந்த போது சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் பரப்பாக பேசப்பட்டு, சிறைத்துறை அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் ஜாமினில் வெளியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராவதை தவிர்த்து வந்தனர். இதனையடுத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரைண அக்டோபர் 05 ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்