சசிகலா, இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு

Sep 05, 2023,09:55 AM IST
பெங்களூரு : தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் சசிகலா மற்றும் இளவரசியை கைது செய்ய பெங்களூரு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் அவரது உறவினரான இளவரசியும் அடைக்கப்பட்டிருந்தார்.



சிறையில் இருந்த போது சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் பரப்பாக பேசப்பட்டு, சிறைத்துறை அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தற்போது சசிகலா, இளவரசி ஆகியோர் ஜாமினில் வெளியே இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராவதை தவிர்த்து வந்தனர். இதனையடுத்து சசிகலா மற்றும் இளவரசிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ஜாமின் கையெழுத்திட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கின் அடுத்த விசாரைண அக்டோபர் 05 ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்