சென்னை: தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் பத்து நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகள் விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்படும். இந்த வேறுபாடு எதனால் என்றால், அந்த அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் பொருத்து மாறுபட்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் - 1 வருட கணக்கு நிறைவு நாள் என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று செயல்படாது.

ஏப்ரல் - 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் - 14ம் தேதி தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் - 18ம் தேதி புனித வெள்ளி
ஏப்ரல் 6, 12, 23, 20, 26, 27 ஆகிய தேதிகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகள் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 நாட்களிலும் வங்கிகளின் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து திட்டமிட்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}