சென்னை: தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் பத்து நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 30 நாட்கள் உள்ளன. இந்த 30 நாட்களில் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்படும் என்ற விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வங்கிகள் விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டு காணப்படும். இந்த வேறுபாடு எதனால் என்றால், அந்த அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்கள் பொருத்து மாறுபட்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் - 1 வருட கணக்கு நிறைவு நாள் என்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று செயல்படாது.
ஏப்ரல் - 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் - 14ம் தேதி தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் - 18ம் தேதி புனித வெள்ளி
ஏப்ரல் 6, 12, 23, 20, 26, 27 ஆகிய தேதிகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகள் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10 நாட்களிலும் வங்கிகளின் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து திட்டமிட்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
{{comments.comment}}