புதுடில்லி: ஆபாசக் காட்சிகளை ஓளிபரப்பி வந்த 18 ஒடிடி தளங்களை முடக்கி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒடிடி தளங்கள் சமீபகாலமாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இதன் வளர்ச்சி காரணமாக பல படங்கள் நேரடியாக ஒடிடி தளங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஒடிடி தளங்களுக்கு சென்சார் இல்லாததினால் அதிகளவில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம் பெற்று வருதாக தகவல்கள் பரவியன. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தாத நிலையில், தற்பொழுது நடவடிக்கை தொடங்கியுள்ளது.
ஆபாச காட்சிகள் அடங்கிய படங்களை எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஒளிபரப்பி வந்த ஓடிடி வலைத்தளங்கள், செயலிகள், சமூக வலைத்தள கணக்குகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 18 ஒடிடி தளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் டிரீம் பிலிம்ஸ், வூவி, யெஸ்மா, அன்கட் ஆடா, ட்ரை ஃபிளிக்ஸ், எக்ஸ் பிரைம், நியான் எக்ஸ், விஜபி பேஷரம்ஸ், ஹன்டர்ஸ், ரேபிட் எக்ஸ்ட்ராமூட், நியூஃப்லிக்ஸ், மூட்எக்ஸ், மொஜிப்பிலிஸ், ஹாட் ஜாட்ஸ் விஜபி உள்ளிட்டவைகளும், 10 செயலிகள், 57 வலைத்தள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் முகநூல் பக்கத்தில் 12 கணக்குகள், இன்ஸ்டாகராம் பக்கத்தில் 17 கணக்குகள், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் 16 கணக்குகள், யூடியூபில் 12 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டள்ளது. முடக்கப்பட்ட ஒடிடி தளங்களில் ஒரு ஓடிடி செயலியை ஒரு கோடி பேரும், 2 ஓடிடி செயலிகளை 50 லட்சத்திற்கு அதிகமானோரும் கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த ஓடிடி தளங்கள் வலைத்தளங்களில் முகநூல், இன்ஸ்டாகிராம் , எக்ஸ் மற்றும் youtube பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட சமூக வலைதளங்களை மட்டும் 32 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்ந்து வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}