கிருஷ்ணகிரி: பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என BMRCL மெட்ரோ நிர்வாகம் கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகருக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஓசூரில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெங்களூருக்கு சென்று விட முடியும். ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை மார்க்கமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் உற்பத்தி ஆலைகளை ஓசூரிலும், அலுவலகங்களை பெங்களூருவிலும் அமைத்திருப்பதால் இரு நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முக்கியம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒசூர்- பொம்மசந்திரா வழித்தடத்தை இணைக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் தான் பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டு வரப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது இரு நகரங்களுக்கும் இடையினான போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி, இத்திட்டம் ஓசூர் நகரத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டு வந்தது .
இத்தகைய சூழலில் தான் பெங்களூரு மெட்ரோ நிலையம், பெங்களூர் மெட்ரோ ரயில் கழக நிர்வாகம் இரு நகரங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் திட்ட இணைப்பு குறித்த விரிவான ஆய்வு அறிக்கை நடத்தியதாகவும், தொழில்நுட்ப ரீதியிலாக இது சரிப்பட்டு வராது என அறிக்கை தந்து இருப்பதாகவும் BMRCL மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதாவது இரண்டு மெட்ரோ ரயில் நிறுவனங்களும் வேறுபட்ட மின்சார கட்டமைப்புகளை பயன்படுத்துவதால் அவற்றை ஒருங்கிணைத்து இந்த ரயில் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
சித்திரையும் வெயிலும்!
{{comments.comment}}