பெங்களூரு : ஐடி நகரமான பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு ஒரு புறம், வெயிலின் கொடுமை ஒரு பக்கம் என மக்கள் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். சாப்பிட்டு விட்டு கை கழுவினால் கூட அபராதம் என சொல்லும் அளவிற்கு நிலைமை மோசம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நிலைமை மிகவும் மோசமாகி வருவதால் கொரோனா சமயத்தில் இருந்தது போல் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கல்வி நிறுவனங்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் என பலரும் கர்நாடக அரசிற்கு சோஷியல் மீடியா மூலம் கோரிக்கைகளை குவித்து வருகின்றனர். குறிப்பாக ஐடி ஊழியர்கள், ஒர்க் ஃபிரம் ஹோமை கட்டாயம் ஆக்குங்கள் என கேட்டு கதறி வருகின்றனர். மழைக்காலம் துவங்கும் வரை வீட்டில் இருந்து வேலை செய்வதை கட்டாயம் ஆக்குங்கள் என கேட்டு வருகிறார்கள்.
பல கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடம் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. வீட்டில் இருந்து வேலை செய்வது அரசு கட்டாயமாக்கினால், பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி செய்தால் பெங்களூரு நகரில் தண்ணீரின் தேவை சற்று குறைய வாய்ப்புள்ளதாகவும் சிலர் யோசனை வழங்கி வருகின்றனர். கடந்த 30-40 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டை பெங்களூரு நகரம் சந்தித்து வருவதாக பெங்களூரு வெதர்மேனும் கூறி உள்ளார்.
ஒர்க் ஃபிரம் ஹோம் கிடைத்து, பலரும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டால் அரசுக்கு இருக்கும் நெருக்கடியும் குறையும். இதனால் அரசும் சரியாக திட்டமிடவும், நிலைமையை கையாளவும் எளிதாக இருக்கும். கொரோனா சமயத்தில் வீட்டில் இருந்த படி தானே மாணவர்கள் படித்தார்கள். குறிப்பாக ஐடி ஊழியர்கள் நாட்டின் பல மூலைகளிலும் இருந்து வேலை பார்த்தனர். இதை முறையை தயவு செய்து தற்போதைய தண்ணீர் தட்டுப்பாடு நிலைக்கும் அமல்படுத்துங்கள் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் கேட்க துவங்கி விட்டனர்.
2023ம் ஆண்டு குறைவாக மழை பெய்ததே பெங்களூருவின் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எல் நினோவின் பாதிப்பின் காரணமாக தான் மழை அளவு குறைந்ததாகவும், அதன் எதிரொலியாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால் இன்னும் கோடை காலம் துவங்கி விட்டால் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என பலரும் புலம்பி வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் கர்நாடகாவில் பெங்களூருவின் புறநகர் உள்ளிட்ட 7082 கிராமங்கள் மிக கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது வேறு பலருக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏற்கனவே 50 சதவீதம் போர்வெல்கள் பெங்களூரு நகரில் வறண்டு விட்டதாம். நகரின் பல பகுதிகளிலும் பெரிய கேன்களை வைத்துக் கொண்டு தண்ணீர் வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை இப்போதே பார்க்க முடிகிறது.
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
{{comments.comment}}