- பா.பானுமதி
பெற்றோர் உதவி பெரிதாய் கிடைத்து விடுவதில்லை
மற்றோர் உதவி மறந்தும் அமைவதில்லை
உற்றார் உதவி உருப்படியாய் இருப்பதில்லை
உறவினர் உதவி ஒருநாளும் கிடைப்பதில்லை
உடன் பிறந்தார் உதவி கிடைத்திட இயலுவதில்லை
கணவரின் உதவி அனைவருக்கும் அமைவதில்லை
பிள்ளைகள் பெரிதாய் உதவிட முனைவதில்லை

காலத்திற்கும் கை கொடுப்பது தந்தை தந்த கல்வி
கல்வியை மட்டும் கட்டிக்கொண்டால்
கடைசி வரை இல்லை கேள்வி
காலத்திற்கும் உதவுவது கல்வி அன்றி வேறில்லை
வேலை இன்றி வேறு எதுவும்
அவளுக்கு உதவுவதில்லை
அவளை உயர்த்துவதுமில்லை
கல்வியே கடவுளாய் அமைந்து விடுகிறது காரிகைகளுக்கு
காலத்திற்கும் உதவுவது கல்வியே அன்றி வேறில்லை
M Bharathi Poem: ஆட்சி!
Tamil Short Story: நிலாவின் மந்திரச் சொல்!
Ladies Finger: வெண்டைக்காய் ஒரு விளையாட்டு பொருளா?
அர்கியம் அமைப்பின் AI-ஆதார் செயலி அறிமுகம்
நிலவின் கவிதை!
மனம் திறந்து பேசுதடா .. மாந்தோப்பில் கிளி இரண்டு!
எங்கே எனது கவிதை!
ஓர் நதி ஓர் பெளர்ணமி ஓர் ஓடம்!
Forget your age... சாதிக்கும் எண்ணம் இருக்கும் வரை.. என்றும் நீங்கள் இளையவரே!
{{comments.comment}}