பழையன கழிதலும் புதியன புகுதலும்.. தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாட்டம்.. மழையால் மாசு கம்மி!

Jan 13, 2025,05:18 PM IST

சென்னை:   பழையன கழிதலும் புகுதன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்று போகிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உழவுத் தொழிலுக்கு நன்றி செய்யும் விதமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது தை முதல் நாள் சூரியனை வணங்கி அனைத்து இல்லங்களிலும் புதுப் பானைகளில் இனிப்பு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. தை இரண்டாம் நாள் உழவுத் தொழிலில் சிறந்து விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் நாளாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை நாளை வரவேற்பதற்காக இன்று போகிப் பண்டிகை நாடு முழுவதும் களைகட்டத் துவங்கியுள்ளது.




தமிழ் மாதத்தில் மார்கழி இறுதி நாளன்று, அதாவது பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். இந்நாளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற  பழமொழிக்கு ஏற்ப இல்லங்கள் தோறும் வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, தேவையில்லாத பொருட்களை வெளியேற்றுவர். அன்றைய நாள் வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வேண்டாத பொருட்கள் மற்றும் வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்தப்பட்டு வீடுகளில் வண்ணங்கள் பூசி, அலங்காரம் செய்யப்படும்.


இப்படி வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வீட்டில் உள்ள குப்பைகளை வெளியேற்றி அந்த குப்பைகளை தீயில் இட்டு எரித்து போகி கொண்டாடுவர். இவற்றோடு நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள், பழைய பழக்க வழக்கங்கள் தீயிலிட்டு எரிவதாக ஐதீகம். வீடு எப்படி சுத்தமாகிறதோ அதே போல் நம் மனதும் தூய்மை பெறுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள்  முழுவதும் தீயில் எரிந்து நல்ல குணங்கள் நம்மை தொற்றிக் கொள்கின்றன. இதன் காரணமாகத்தான் போகிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் நம் உள்ள தூய்மையுடன் சிறப்பான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


சென்னையிலும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆனால் காலையிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பெரிய அளவில் புகை மாசு ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டுமே மிதமான மாசு நிலவியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் கூட டயர் போன்ற ஆபத்தான பொருட்களை தீயிடாமல் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு போகியைக் கொண்டாடினர்.


அனைவருக்கும் பொங்கல் பண்டிகை வாழ்த்துகள் மக்களே..!


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு.. ஜனாதிபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார்

news

சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்!

news

INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!

news

அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்

news

கருப்பு வெள்ளை இந்திப் படங்களின் ஸ்டைலிஷான நாயகன்.. மறக்க முடியாத தர்மேந்திரா

news

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது

news

சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!

news

ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்