போஜ்புரி நடிகை.. பீகாரில்.. மர்மமான முறையில் தற்கொலை.. காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!

May 01, 2024,11:15 AM IST

பாட்னா:  போஜ்புரி நடிகை அமிர்தா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகை அமிர்தா பாண்டே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.


அந்த விசாரணையில், இவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனது வாழ்க்கை இரண்டு படகுகளில் பயணம் செய்ததால் அதில் ஒன்றை நான் மூழ்கடிப்பதன் மூலம் பயணம் எளிதானது என பதிவிட்டு இருந்தார். ஆனால் இதுவரை தற்கொலை காரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.




இதனைத் தொடர்ந்து நடிகை அமிதா பாண்டே குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை என்பதால், தொழிலை பற்றி கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நடிகை அமிதா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


 நடிகை அமிர்தா பாண்டே, நடிகர் போஜ்புரி நட்சத்திரம் கேசரி லால் யாதவுடன் திவானபன் படத்தில் நடித்துள்ளார்.ஹிந்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவர் பரிக்ஷோத் என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.

இவருடைய கணவர் சந்திரமணி. இவர் மும்பையில் அனிமேஷன் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த ஏப்ரல் பதினெட்டாம் தேதி  சகோதரி திருமணத்தில் பங்கேற்பதற்காக அமிர்தா பாண்டே பகல்பூருக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகு அவரது கணவர் மட்டும் மும்பைக்குச் சென்றார். ஆனால் அமிர்தா பாண்டே மும்பைக்குச் செல்லாமல் அங்கேயே இருந்து விட்டார்.


மேலும் நடிகை அமிர்தா பாண்டே கணவருடன் எதுவும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராஜ் கூறுகையில், நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.  தனிப்படை அமைக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்