போஜ்புரி நடிகை.. பீகாரில்.. மர்மமான முறையில் தற்கொலை.. காரணம் என்ன.. போலீசார் தீவிர விசாரணை!

May 01, 2024,11:15 AM IST

பாட்னா:  போஜ்புரி நடிகை அமிர்தா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


பீகார் மாநிலம் பகல்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நடிகை அமிர்தா பாண்டே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.


அந்த விசாரணையில், இவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் எனது வாழ்க்கை இரண்டு படகுகளில் பயணம் செய்ததால் அதில் ஒன்றை நான் மூழ்கடிப்பதன் மூலம் பயணம் எளிதானது என பதிவிட்டு இருந்தார். ஆனால் இதுவரை தற்கொலை காரணம் குறித்து போலீசாருக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை.




இதனைத் தொடர்ந்து நடிகை அமிதா பாண்டே குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். அப்போது அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை என்பதால், தொழிலை பற்றி கவலைப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நடிகை அமிதா பாண்டே மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


 நடிகை அமிர்தா பாண்டே, நடிகர் போஜ்புரி நட்சத்திரம் கேசரி லால் யாதவுடன் திவானபன் படத்தில் நடித்துள்ளார்.ஹிந்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இவர் பரிக்ஷோத் என்ற வெப் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர்.

இவருடைய கணவர் சந்திரமணி. இவர் மும்பையில் அனிமேஷன் பொறியாளராக பணிபுரிகிறார். கடந்த ஏப்ரல் பதினெட்டாம் தேதி  சகோதரி திருமணத்தில் பங்கேற்பதற்காக அமிர்தா பாண்டே பகல்பூருக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகு அவரது கணவர் மட்டும் மும்பைக்குச் சென்றார். ஆனால் அமிர்தா பாண்டே மும்பைக்குச் செல்லாமல் அங்கேயே இருந்து விட்டார்.


மேலும் நடிகை அமிர்தா பாண்டே கணவருடன் எதுவும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


இதுகுறித்து மாநகர காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராஜ் கூறுகையில், நடிகை அமிர்தா பாண்டே தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும்.  தனிப்படை அமைக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்