"பிர்மிங்காம் நகரம் திவால்".. காஸ்ட் கட்டிங் திட்டங்கள் அமலுக்கு வந்தன!

Sep 07, 2023,12:01 PM IST
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் 2வது பெரிய நகரான பிர்மிங்காம் நகரம் திவாலாகி விட்டதாக அந்த நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளையும் நகர நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது.

தேவையில்லாத செலவுகளைக் குறைக்க நகர நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதுதொடர்பான 114 அறிவிப்பை நகர நிர்வாகக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.  அதில், நிதிப் பற்றாக்குறை இருப்பதாலும், நிதிக் கையிருப்பு கிட்டத்தட்ட வெகுவாக சரிந்து விட்டதாலும், வரும் நாட்களில் செலவுகளில் கட்டுப்பாடு தேவை.கையிருப்பு என்னவோ அதற்குள்ளாகத்தான் செலவுகள் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



சம ஊதியம் கோரி ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்திருப்பதால் பிர்மிங்காம் நகர நிர்வாகம் பெரும் ஸ்தம்பிப்பை சந்தித்துள்ளது.  பிர்மிங்காம் நகரில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கிலாந்தின் மிகப் பெரியநகரங்களில் ஒன்றான பிர்மிங்காமில், பன்னாட்டுக் கலாச்சாரம் செழித்தோங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியையும் கூட பிர்மிங்காம் நகரம் நடத்தியது.

கடந்த ஜூன் மாதமே சம ஊதியம் கோரி பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகளும், வழக்குகளும் வந்ததால் அரசுடன் பிர்மிங்காம் நகர நிர்வாகம் பேச்சு நடத்தியது. இருப்பினும் அதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில் தற்போது திவால் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது நகர நிர்வாகம்.

நூற்றுக்கணக்கான பெண்கள் தொடர்ந்து வழக்குகள்தான் பிர்மிங்காம் நகர நிர்வாகத்தின் இந்த நிலைக்கு முக்கியக் காரணம். ஆண்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், அவர்கள் கோரிய நிவாரணத்தை வழங்க பிர்மிங்காம் நகர நிர்வாகத்துக்கு உத்தரவிட்டதால்தான் அந்த நகரம் தற்போது சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்