ஹேப்பி பர்த் டே விஜய்...நடிகர் விஜய் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Jun 22, 2023,09:55 AM IST
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவின் மகனான விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது இந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்து அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

நடிகர், நடன கலைஞர், பாடகர் என பல திறமைகளைக் கொண்ட விஜய் இன்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்காக திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா மூலம் விஜய்க்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில் விஜய் பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.



* 1984 ஆம் ஆண்டு தனது 10 வது வயதில் வெற்றி என்ற படம் தான் விஜய் நடித்த முதல் படம். இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

* தனது முதல் படத்திற்காக விஜய் வாங்கிய முதல் சம்பளம் ரூ.500. நடிகரும், தயாரிப்பாளருமான பி.எஸ். வீரப்பா இதை விஜய்க்கு அளித்தார்.

* 1985 ம் ஆண்டு நான் சிவப்பு மனிதன் படத்தில் ரஜினியுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்தார் விஜய்.

* 1992 ம் ஆண்டு தனது 18 வது வயதில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்.

* இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.

* வெளிநாடுகளில் ரூ.50 கோடி வசூல் செய்த விஜய்யின் முதல் படம், கில்லி.

* ஷங்காய் திரைப்பட திருவிழாவில் காவல் படமும், மெல்பெர்ன் திரைப்பட விழாவில் நண்பன் படமும் திரையிடப்பட்டன. 

* 100 கோடி வசூலை கடந்த விஜய்யின் முதல் படம் துப்பாக்கி. இது ரஷ்ய திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

* கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு ரூ.100 கோடியை வசூல் செய்தது விஜய் நடித்த மாஸ்டர் படம்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்