டெல்லி: பாஜக தனது 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கத்காரி, பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஹரியானா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகிய மனோகர் லால் கட்டாருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2ம் தேதி பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 16 மாநிலங்களைச் சேர்ந்த 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் இன்று 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இதில் மூத்த தலைவர் நிதின் கத்காரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர் முதல் பட்டியலில் இடம் பெறாதது வியப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா முதல்வராக இருந்து பதவி விலகிய மனோகர் லால் கட்டார் ஹரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமீர்புர் தொகுதியில் போட்டியிடுவார் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் நிதின் கத்காரி போட்டியிடுகிறார். பீத் தொகுதியில் பங்கஜா முண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பசவராஜ் பொம்மை போட்டி: முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலம் ஹவேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையிலான அரசைத்தான் வீழ்த்திதான் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல முன்னாள் முதல்வரான பி.எஸ். எதியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார். தேஜஸ்வி சூர்யா மீண்டும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}