டெல்லி: பாஜக தனது 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கத்காரி, பியூஷ் கோயல், அனுராக் சிங் தாக்கூர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஹரியானா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலகிய மனோகர் லால் கட்டாருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2ம் தேதி பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 16 மாநிலங்களைச் சேர்ந்த 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். முதல் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில் இன்று 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இதில் மூத்த தலைவர் நிதின் கத்காரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது பெயர் முதல் பட்டியலில் இடம் பெறாதது வியப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா முதல்வராக இருந்து பதவி விலகிய மனோகர் லால் கட்டார் ஹரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ஹமீர்புர் தொகுதியில் போட்டியிடுவார் என் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் தொகுதியில் நிதின் கத்காரி போட்டியிடுகிறார். பீத் தொகுதியில் பங்கஜா முண்டே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பசவராஜ் பொம்மை போட்டி: முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கர்நாடக மாநிலம் ஹவேரி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது தலைமையிலான அரசைத்தான் வீழ்த்திதான் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
அதேபோல முன்னாள் முதல்வரான பி.எஸ். எதியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார். தேஜஸ்வி சூர்யா மீண்டும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}